கரன்சி சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கையால் இந்­தி­யாவின் பண­வீக்கம் குறையும்கரன்சி சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கையால் இந்­தி­யாவின் பண­வீக்கம் குறையும் ... ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 68 ஆனது ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 68 ஆனது ...
சோதனை காலத்தை கடந்­து­விட்­டது இந்­திய தகவல் தொழில்­நுட்ப துறை: ‘நாஸ்காம்’ மதிப்­பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2016
01:02

புது­டில்லி : ‘இந்­தி­யாவின் தகவல் தொழில்­நுட்பம் – பி.பி.எம்., துறை, சோத­னை­களை கடந்து, மித­மான வளர்ச்­சி­யுடன் காணப்­ப­டு­கி­றது’ என, தேசிய மென்­பொருள் மற்றும் சேவை நிறு­வ­னங்கள் கூட்­ட­மைப்­பான, ‘நாஸ்காம்’ தெரி­வித்து உள்­ளது.
இது குறித்து, இந்த அமைப்பு வெளி­யிட்­டுள்ள அறிக்கை:உள்­நாடு மற்றும் சர்­வ­தேச கார­ணி­களின் தாக்­கத்தில் இருந்து, தகவல் தொழில்­நுட்பம் – பி.பி.எம்., துறை விடு­பட்டு வரு­கி­றது. இத்­துறை, சோதனை காலத்தை கடந்து, வளர்ச்சிப் பாதையில் பய­ணிக்க துவங்­கி­யுள்­ளது. நடப்பு நிதி­யாண்டில், இத்­துறை, 8 – 10 சத­வீதம் வளர்ச்சி காணும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. எனினும், இத்­துறை நிறு­வ­னங்­களின் வளர்ச்­சியில், எஞ்­சி­யுள்ள பல்­வேறு கார­ணி­களின் தாக்கம், அடுத்து வரும் காலாண்­டு­களில் எதி­ரொ­லிக்கும்.
சர்­வ­தேச அளவில், இத்­து­றையின் வளர்ச்சி சிறப்­பாக இருக்கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. அதில், இந்­தி­யாவின் வலி­மை­யான பங்­க­ளிப்பு தொடரும். இத்­துறை, டிஜிட்டல் தொழில்­நுட்­பங்கள் உள்­ளிட்ட நவீன வழி­மு­றை­களில், தொடர்ந்து முத­லீடு செய்து வரு­வதன் மூலம், வளர்ச்­சியை தக்­க­வைத்துக் கொள்ள முடியும்.சர்­வ­தேச மற்றும் உள்­நாட்டு நில­வ­ரங்கள், அர­சியல், பொரு­ளா­தாரம், வர்த்­தகம் உள்­ளிட்­ட­வற்றால் ஏற்­படும், குறு­கிய கால தாக்­கத்தை சமா­ளிக்க கூடிய வலி­மை­யுடன், ஐ.டி., துறை விளங்­கு­கி­றது.
நவீன வர்த்­த­கங்கள் மற்றும் சமு­தா­யத்தின் ஓர் அங்­க­மாக, தொழில்­நுட்­பமும் மென்­பொருள் பயன்­பாடும் உள்­ளன. சர்­வ­தேச அளவில், மென்­பொருள் மற்றும் தகவல் தொழில்­நுட்ப சேவை துறைகள், 2017ல், முறையே, 7.2 சத­வீதம், 4.4 சத­வீதம் என்­ற­ளவில் வளர்ச்சி காணும்.இந்­திய ஐ.டி., – பி.பி.எம்., துறை, வலி­மை­யான அடித்­த­ளத்தை கொண்­டுள்­ளதால், 2025ல், இத்­து­றையின் சந்தை மதிப்பு, 35 ஆயிரம் கோடி டால­ராக உயரும்.கடந்த, 2014 முதல், இத்­து­றையின், டிஜிட்டல் சேவை­க­ளுக்­கான ஒதுக்­கீடு, இரு மடங்கு அதி­க­ரித்து உள்­ளது.
இந்­திய நிறு­வ­னங்கள், சர்­வ­தேச போட்­டியை சமா­ளிக்க, டிஜிட்டல் தொழில்­நுட்­பங்­க­ளுக்கு, அதி­க­ளவில் முத­லீடு செய்து, ஆற்­றலை மேம்­ப­டுத்திக் கொள்­வது அவ­சி­ய­மாகும். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)