பதிவு செய்த நாள்
18 நவ2016
11:47
புதுடில்லி : அடுத்த சில மாதங்களுக்கு டெபாசிட் வட்டி விகிதத்தை குறைக்க எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஹச்டிஎப்சி வங்கி உள்ளிட்டவைகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான பணிகளையும் இவ்வங்கிகள் துவங்கி உள்ளன.
ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதை அடுத்து, வங்கிகளில் டெபாசிட் செய்யும் தொகையை அதிகரித்து வருவதால், 15 முதல் 25 பிபிஎஸ் விகிதங்களின் அடிப்படையில் டெபாசிட் வட்டிவிகிதம் குறைக்கப்பட உள்ளது. இதன்படி, ரூ.1 கோடிக்கு மேல் டெபாசிட் செய்பவர்களுக்கு 25 பிபிஎஸ் அடிப்படையில் வட்டி விகிதத்தை குறைக்க உள்ளதாக ஹச்டிஎப்சி வங்கியும், 15 பிபிஎஸ் அடிப்படையில் குறைக்க உள்ளதாக ஐசிஐசிஐ வங்கியும் அறிவித்துள்ளன.
டெபாசிட் மட்டுமின்றி கடன்களுக்கான வட்டி விகிதத்தையும் குறைக்க பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளன. அக்டோபர் இறுதி வரையிலான 12 மாதத்தில் வங்கி டெபாசிட் 9.8 சதவீதம், அதாவது ரூ.99,839 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், அதற்கு முந்தைய 12 மாதங்களில் டெபாசிட் வளர்ச்சி 10.5 சதவீதமாக இருந்ததாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ரூபாய் வாபஸ் அறிவிப்பிற்கு முன், அதிகப்படியான பணம் பாண்ட் மார்க்கெட்டில் வரவு வைக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த அறிவிப்பிற்கு பிறகு பாண்ட்.,ல் முதலீடுகளை குவிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|