பதிவு செய்த நாள்
18 நவ2016
15:22
புதுடில்லி : ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி, நவம்பர் 8ம் தேதி இரவு அறிவித்தார். இதனால் பலரும் தங்களின் கையில் இருக்கும் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்ய நகைக்கடைகளை நோக்கி படையெடுத்தனர். சில நகைக்கடைக்காரர்களும் இதனை பயன்படுத்தி, இரவு முழுவதும் நகை விற்பனை செய்தனர்.
இதனால் நவம்பர் 9ம் தேதி வங்கி சேமிப்பு கணக்கில் ரூ.2.5 லட்சத்திற்கு மேல், தற்போதைய கணக்கில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்தவர்கள் டிசம்பர் 30ம் தேதிக்குள் கணக்கு காட்ட வேண்டும் என வருமான வரித்துறை கேட்டுள்ளது. இதன் விளைவாக நகைக்கடைக்காரர்கள் தங்கம் இறக்குமதியை ரத்து செய்துள்ளனர். சிறு நகை வியாபாரிகள் மட்டுமே தங்கம் இறக்குமதியை ரத்து செய்வதாகவும், பெரு வியாபாரிகள் வழக்கம் போல் தங்கம் இறக்குமதி செய்து, தங்களின் வழக்கமான தொழிலை கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட பிறகு தங்கத்தில் முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து இதுவரை 600 நகைக்கடைக்காரர்களுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும் தங்கத்தில் டெபாசிட் செய்தவர்கள், பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அதிக தங்கம் வாங்கியவர்கள் பற்றிய விபரங்களை அளிக்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. இதனால் திருமண சீசனில் தங்க விற்பனை சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|