மாலைநேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.336 குறைவுமாலைநேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.336 குறைவு ... இந்தியா – இஸ்ரேல் இடையே வளமான வர்த்தக வாய்ப்புகள் இந்தியா – இஸ்ரேல் இடையே வளமான வர்த்தக வாய்ப்புகள் ...
வருமான வரித்துறை கெடுபிடி : தங்கம் இறக்குமதியை நிறுத்திய நகைக்கடை உரிமையாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2016
15:22

புதுடில்லி : ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி, நவம்பர் 8ம் தேதி இரவு அறிவித்தார். இதனால் பலரும் தங்களின் கையில் இருக்கும் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்ய நகைக்கடைகளை நோக்கி படையெடுத்தனர். சில நகைக்கடைக்காரர்களும் இதனை பயன்படுத்தி, இரவு முழுவதும் நகை விற்பனை செய்தனர்.
இதனால் நவம்பர் 9ம் தேதி வங்கி சேமிப்பு கணக்கில் ரூ.2.5 லட்சத்திற்கு மேல், தற்போதைய கணக்கில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்தவர்கள் டிசம்பர் 30ம் தேதிக்குள் கணக்கு காட்ட வேண்டும் என வருமான வரித்துறை கேட்டுள்ளது. இதன் விளைவாக நகைக்கடைக்காரர்கள் தங்கம் இறக்குமதியை ரத்து செய்துள்ளனர். சிறு நகை வியாபாரிகள் மட்டுமே தங்கம் இறக்குமதியை ரத்து செய்வதாகவும், பெரு வியாபாரிகள் வழக்கம் போல் தங்கம் இறக்குமதி செய்து, தங்களின் வழக்கமான தொழிலை கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட பிறகு தங்கத்தில் முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து இதுவரை 600 நகைக்கடைக்காரர்களுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும் தங்கத்தில் டெபாசிட் செய்தவர்கள், பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அதிக தங்கம் வாங்கியவர்கள் பற்றிய விபரங்களை அளிக்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. இதனால் திருமண சீசனில் தங்க விற்பனை சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)