பதிவு செய்த நாள்
18 நவ2016
15:57
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (நவம்பர் 18) இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டன. சுமார் 6 மாதங்களுக்கு பிறகு சென்செக்ஸ் 27, 000 புள்ளிகளுக்கு கீழாகவும், நிப்டி 8100 புள்ளிகளுக்கு கீழும் சரிந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 77.38 புள்ளிகள் சரிந்து 26,150.24 புள்ளிகளாகவும், நிப்டி 5.85 புள்ளிகள் சரிந்து 8074.10 புள்ளிகளாகவும் இருந்தன.
அமெரிக்க பெடரல் வங்கி அடுத்த மாதம் தனது வட்டி விகிதத்தை உயர்த்த கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதன் காரணமாக சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவடைந்து 68 என்ற நிலையை எட்டி உள்ளது. இதே போன்று இந்தியாவில் ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெற்றதன் எதிரொலியாக பணம் டெபாசிட் செய்வது, பணம் எடுப்பது போன்றவைகளுக்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் தங்கம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது.
இது போன்ற பல்வேறு காரணங்களால் முக்கிய துறை பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து கடுமையாக சரிந்து வருவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பார்தி, ஹீரோ மோட்டோகார்ப், மகேந்திரா உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வுடனும், டாடா ஸ்டீல், ஐடிசி, கெயில், ஆசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவடைந்தும் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|