பதிவு செய்த நாள்
18 நவ2016
23:26
புதுடில்லி : மத்திய வர்த்தக துறை செயலர் ரீடா தியோத்தியா கூறியதாவது: இந்தியா – இஸ்ரேல் இடையிலான பரஸ்பர வர்த்தகம், 500 கோடி டாலர் என்ற அளவிற்கு உள்ளது. இது, இரு நாடுகளின் ஆற்றல், பொருளாதாரம், வர்த்தக வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது, மிகவும் குறைவாகும்.
இந்தியா – இஸ்ரேல் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், பரஸ்பரம் இணைந்து செயல்பட, பல்வேறு வர்த்தக வாய்ப்புகள், இருதரப்பிலும் உள்ளன. குறிப்பாக, வேளாண்மை, நீர்ப்பாசனம், மருந்து, சூரியசக்தி மின்சாரம் உள்ளிட்ட துறைகளில், அவை கூட்டு வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
இஸ்ரேல், தகவல் தொடர்பு துறையில் வலிமையாக உள்ளது. இத்துறை நிறுவனங்களுக்கு, ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம், வளமான வர்த்தக வாய்ப்பை வழங்கியுள்ளது; பாதுகாப்புத் துறையிலும், தொழில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விவசாயத்தில், நாம் சந்திக்கும் பல்வேறு சவால்களுக்கு, இஸ்ரேல் தீர்வளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|