பதிவு செய்த நாள்
18 நவ2016
23:27
பெங்களூரு : இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, விஷால் சிக்கா கூறியதாவது: அமெரிக்க அதிபராக, பொறுப்பேற்க உள்ள டொனால்டு டிரம்ப், குடியேற்ற கட்டுப்பாடு உள்ளிட்ட மூன்று முக்கிய பிரச்னைகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண உள்ளதாக தெரிவித்து உள்ளார். அவர், உள்நாட்டினருக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுனர்களை பணியமர்த்த வழங்கப்படும், எச்.1பி., விசா ரத்து செய்யப்படும் என, தெரிவித்து உள்ளார். அவ்வாறு செய்தால், அது, இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாயை பாதிக்கும். அமெரிக்க நிறுவனங்களுக்கு, குறைந்த செலவில், இந்திய வல்லுனர்களை வரவழைத்து, சேவை வழங்க இயலாத நிலை ஏற்படும். அப்பணிகளுக்கு, அதிக ஊதியத்தில், அமெரிக்க வல்லுனர்களை அமர்த்த நேரிடும். இந்த கூடுதல் செலவு காரணமாக, இன்போசிஸ் வருவாய் குறையும். ஆனால், எந்த அளவிற்கு குறையும் என்பது, டிரம்ப் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|