பதிவு செய்த நாள்
18 நவ2016
23:29
புனே : சீனாவின் மொபைல் போன் நிறுவனங்கள், இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவிலும், மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருகின்றன.
இந்தாண்டு, ஜூலை – செப்., வரையிலான காலாண்டில், சர்வதேச ஸ்மார்ட் போன் விற்பனையில், சீனாவின், ‘ஹுவேய், ஒப்போ, பி.பி.கே.சி.இ.,’ ஆகிய மூன்று நிறுவனங்களின் பங்களிப்பு, 21 சதவீதமாக உள்ளது. மதிப்பீட்டு காலத்தில், ஸ்மார்ட் போன் விற்பனையில், உலகளவில் முன்னணியில் உள்ள ஐந்து நிறுவனங்களில், இந்த மூன்று சீன நிறுவனங்கள் தான், விற்பனையிலும், சந்தை பங்களிப்பை அதிகரித்துக் கொள்வதிலும், வளர்ச்சி கண்டுள்ளன.
இதே காலத்தில், சீனாவில், ஸ்மார்ட் போன் விற்பனை, 12.4 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிலும், ஒப்போ, பி.பி.கே.சி.இ., ஆகிய நிறுவனங்களின் பங்களிப்பு அதிகம். இந்த இரு நிறுவனங்களும், இந்தியா, இந்தோனேஷியா, மலேஷியா, தாய்லாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளிலும் வலுவாக காலுான்றி, வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|