பதிவு செய்த நாள்
18 நவ2016
23:30
புதுடில்லி : மோட்டார் வாகன துறையில், புதிதாக, ஆறரை கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என, மாருதி சுசூகி தெரிவித்து உள்ளது.
இது குறித்து, மாருதி சுசூகி இந்தியா நிர்வாக இயக்குனர் கெனிச்சி ஆயுகவா கூறியதாவது: இந்தியாவில், மோட்டார் வாகன துறை சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மோட்டார் வாகன துறையின் பங்கு, 7.1 சதவீதம் என்றளவில் உள்ளது. இந்த துறையின் மூலம், நேரடி மற்றும் மறைமுகமாக, 3.20 கோடி பேர் வேலை செய்கின்றனர். வரும், 2026ல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மோட்டார் வாகன துறை பங்கு, 12 சதவீதத்தை விட அதிகரிக்கும். அந்த துறையின் மூலம், 6.50 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
கடந்த, 10 ஆண்டுகளாக, மோட்டார் வாகன துறையில் செய்துள்ள முதலீடு, 3,500 கோடி டாலரை தாண்டியுள்ளது. சர்வதேச அளவில், மோட்டார் வாகன துறையில், மூன்று பெரிய நிறுவனங்களில் ஒன்றாக, மாருதி சுசூகி உருவெடுக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக, பல வகையான புதிய கார்களை அறிமுகம் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|