வாகன துறையில் வருகிறது ஆறரை கோடி வேலைவாய்ப்பு வாகன துறையில் வருகிறது ஆறரை கோடி வேலைவாய்ப்பு ... மேற்கு வங்­கத்தில் ஆலை அமுல் நிறு­வனம் துவக்­கு­கி­றது மேற்கு வங்­கத்தில் ஆலை அமுல் நிறு­வனம் துவக்­கு­கி­றது ...
இனி ‘இன்ஸ்­பெக்டர் ராஜ்­ஜியம்’ இருக்­காது; ஓட்­ட­லுக்கு ஒரு மேற்­பார்வை அதி­காரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2016
23:31

புது­டில்லி : ஓட்டல், ரெஸ்­டாரென்ட் உள்­ளிட்ட உண­வ­கங்­களில், மக்­க­ளுக்கு பாது­காப்­பான உணவு வழங்­கப்­ப­டு­கி­றதா என்­பதை கண்­கா­ணிக்க, உணவு பாது­காப்பு மேற்­பார்வை அதி­கா­ரியை நிய­மிக்கும் விதி­மு­றையை, மத்­திய அரசு, விரைவில் அமல்­ப­டுத்த உள்­ளது.
டில்­லியில், ‘பிக்கி’ அமைப்பின் ‘உணவு சேவையில், சில்­லரை விற்­பனை’ குறித்த கருத்­த­ரங்கம் நடை­பெற்­றது. இதில், இந்­திய உணவு பாது­காப்பு மற்றும் தர ஆணை­ய­மான – எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,யின் தலைமை செயல் அதி­காரி, பவன் அகர்வால் பங்­கேற்று பேசி­ய­தா­வது: மக்­க­ளுக்கு பாது­காப்­பான, தர­மான உணவு கிடைப்­பதை, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உறுதி செய்­கி­றது. ஓட்டல், ரெஸ்­டாரென்ட் உட்­பட, உணவு சேவை துறையில் உள்ள, அனைத்து நிறு­வ­னங்­களும், மக்­க­ளுக்கு பாது­காப்­பான, தர­மான உணவுப் பொருட்­களை வழங்க வேண்டும். அதற்­கான விதி­மு­றைகள் மற்றும் கட்­டுப்­பா­டு­களை, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., வகுத்­துள்­ளது.அத­ன­டிப்­ப­டையில், உணவு சேவை துறையின் செயல்­பா­டு­களை, பல்­வேறு அரசு அமைப்­புகள், கவ­னித்து வரு­கின்­றன.
உணவு சேவை துறை, பல­த­ரப்­பட்ட அரசு அமைப்­பு­களின் கீழ் இருப்­பதால், நடை­முறை சிக்­கல்­களை சந்­திப்­ப­தாக, இத்­து­றை­யினர் கவலை தெரி­வித்து உள்­ளனர்.இதை­ய­டுத்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விதி­மு­றைகள் மற்றும் கட்­டுப்­பா­டுகள், மறு ஆய்வு செய்­யப்­பட்டு வரு­கின்­றன. மக்­க­ளுக்கு பாது­காப்­பான, தர­மான உணவு கிடைக்­கவும், அதே சமயம், உணவு சேவை துறையின் வளர்ச்­சியை கருத்தில் கொண்டும், பல்­வேறு திட்­டங்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான பணிகள் நடை­பெற்று வரு­கின்­றன.
இது தொடர்­பாக, மாநில அரசு அமைப்­பு­க­ளுடன் ஆலோ­சனை நடத்தி வரு­கிறோம். உணவு சேவை துறையில், அதி­கா­ரி­களின், ‘இன்ஸ்­பெக்டர் ராஜ்­ஜியம்’ இருக்கக் கூடாது. அதே சமயம், மக்­க­ளுக்கு பாது­காப்­பான உணவு கிடைக்க வேண்டும் என்­பதில், எவ்­வித சம­ர­சத்­திற்கு இட­மின்றி, உறு­தி­யாக உள்ளோம். மாநி­லங்­களில், உணவு பாது­காப்பு ஆய்­வா­ளர்கள் எண்­ணிக்கை குறை­வாக உள்­ளது. இதை உயர்த்தும் நோக்கில், சோதனை அடிப்­ப­டையில், கோவாவில், 1,000 பேருக்கு, உணவு பாது­காப்பு மேற்­பார்வை பயிற்சி அளிக்­கப்­பட்டு வரு­கி­றது.
அடுத்த சில மாதங்­களில், இத்­திட்­டத்தை நாடு முழு­வதும் விரி­வு­ப­டுத்த முடிவு செய்­துள்ளோம். அனைத்து ஓட்­டல்கள், ரெஸ்­டா­ரென்ட்­டுகள் ஆகி­யவை, உணவு பாது­காப்பு மேற்­பார்­வை­யாளர் ஒரு­வரை, கண்­டிப்­பாக நிய­மிக்க வேண்டும். இது குறித்த அறி­விப்பு, விரைவில் வெளி­யாகும். பாது­காப்­பான உணவு குறித்து, சாலை­யோர உண­வ­கங்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்டும். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)