பதிவு செய்த நாள்
20 நவ2016
00:15
புதுடில்லி:பஜாஜ் நிறுவனம், சக்கான் தொழிற்சாலையில், 400 சி.சி., திறன் உடைய, இருசக்கர வாகன உற்பத்தியை துவக்கியுள்ளது. பஜாஜ் ஆட்டோ, இருசக்கர வாகன உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு, மஹாராஷ்டிரா மாநிலம், சக்கான் என்ற இடத்தில் தொழிற்சாலை உள்ளது. அங்கு, பஜாஜ், அதிக சக்தி வாய்ந்த, 400 சி.சி., திறன் கொண்ட, இருசக்கர வாகன உற்பத்தியை துவக்கி உள்ளது.
இதுகுறித்து, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்விற்பனை பிரிவு தலைவர் எரிக் வாஸ் கூறியதாவது:எங்கள் நிறுவனம், 2001, நவ., மாதம், பல்சர் என்ற மாடலில், இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்தது. அந்த வாகனத்துக்கு, இளைஞர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.தற்போது, அதிக சக்தி வாய்ந்த, 400 சி.சி., திறன் உடைய, இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளோம்.
சக்கானில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தியாகும் அந்த வாகனத்தை, அடுத்த மாத மத்தி யில், அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை தயாரிக்க, அசெம்பிளி லைனில் முழுக்க முழுக்க பெண் இன்ஜினியர்கள் மட்டுமே இருந்து உருவாக்கி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|