பதிவு செய்த நாள்
20 நவ2016
00:18
கோல்கட்டா:கேட்டர்பில்லர் நிறுவனம், அதிக திறனுடைய டிரக் வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளது. சர்வதேச அளவில், சுரங்கம், கட்டுமான நடவடிக்கைகளுக்கான கனரக வாகனங்கள் உற்பத்தியில், கேட்டர்பில்லர் முன்னணியில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், அந்நிறுவனத்திற்கு தொழிற்சாலை உள்ளது. தற்போது, கேட்டர்பில்லர், 98 டன் திறனுடைய வாகனங்களை,அதிகளவில் உற்பத்தி செய்ய உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர்கூறியதாவது:எங்கள் நிறுவனத்திற்கு, சுரங்கம், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, ரயில்வே உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு துறைகளில், பல வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது, அந்த துறைகளுக்கு ஏற்றபடி, புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளோம். அதன்படி, திருவள்ளூரில் உள்ள தொழிற்சாலையில், அதிக திறனுடைய, புதியடிரக்குகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|