பதிவு செய்த நாள்
20 நவ2016
00:20
மும்பை:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சந்தா கோச்சார் கூறியதாவது:மத்திய அரசு, 500 – 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்ததை அடுத்து, கடந்த, 10 நாட்களில், வங்கியில், 32 ஆயிரம் கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கியிடம், போதுமான கரன்சி உள்ளது. அவற்றை வங்கிகள், ஏ.டி.எம்.,களில் கொண்டு சேர்ப்பதற்கான, சரக்கு போக்குவரத்து தான் சவாலாக உள்ளது.அதன் காரணமாக, பணம் மாற்ற, மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
புதிய, 500 ரூபாய் அதிகளவில் புழக்கத்தில் வந்தால், இயல்பு நிலை திரும்பும். வங்கி, மொபைல் வங்கிகள் மூலம், சிறிய நகரங்களில், பணத் தட்டுப்பாடு பிரச்னையை தீர்த்து வருகிறது. அரசின் முடிவால், ஏராளமான வர்த்தகர்கள், ‘பாயின்ட் ஆப் சேல்’ எனப்படும், மின்னணு பணப் பரிவர்த்தனை சாதனங்களை நிறுவித் தருமாறு கோரி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|