பதிவு செய்த நாள்
20 நவ2016
00:21
புதுடில்லி:‘‘இந்தாண்டு, ஏப்., – அக்., வரையிலான ஏழு மாதங்களில், முறைகேடாக நிதி திரட்டியது தொடர்பாக, 24 நிறுவனங்களிடம், தீவிர குற்றப் புலனாய்வு பிரிவான – எஸ்.எப்.ஐ.ஓ., விசாரணை நடத்திவருகிறது’’ என, கார்ப்பரேட் விவகாரங்கள் இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வல், லோக்சபாவில் தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது:பல நிறுவனங்கள், கவர்ச்சியான விளம்பரங்கள், பரிசு திட்டங்கள், ஏலச்சீட்டு, பன்னடுக்கு சந்தைப்படுத்தும் முறை போன்ற, ‘பொன்ஸி திட்டங்கள்’ மூலம், மக்களிடம் நிதி திரட்டுகின்றன; இது, நிறுவனங்கள் சட்டத்திற்கு எதிரானது.இத்தகைய திட்டங்களின் கீழ், முறைகேடாக நிதி திரட்டியது தொடர்பாக, நடப்பு நிதியாண்டில், ஏப்., – அக்., வரையிலான ஏழு மாதங்களில், 24 நிறுவனங்கள், எஸ்.எப்.ஐ.ஓ.,வின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளன.
இதன்படி, மேற்கு வங்கத்தில், 19 நிறுவனங்கள், அசாமில், 3, மஹாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களில், தலா ஒரு நிறுவனம் மீது, விசாரணை நடைபெற்று வருகிறது. அதில், இரு நிறுவனங்களின் விசாரணை முடிந்து விட்டது. கடந்த நிதியாண்டில், 47 நிறுவனங்களின் நிதிமுறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. முறைகேடாக நிதி திரட்டியது தொடர்பாக, கடந்த நான்கு ஆண்டு களில், 258 நிறுவனங்கள் மீது, எஸ்.எப்.ஐ.ஓ., வழக்கு தொடர்ந்து உள்ளது. அதில், 163 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. 77 நிறுவனங்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவற்றின் இயக்குனர்களுக்கு, சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|