சரக்கு வாக­னங்­க­ளுக்கு தினமும் ரூ.1,400 கோடி இழப்புசரக்கு வாக­னங்­க­ளுக்கு தினமும் ரூ.1,400 கோடி இழப்பு ... ரூபாயின் மதிப்பும் சரிந்தது ரூபாயின் மதிப்பும் சரிந்தது ...
இந்­திய சேவை துறையின் ஆத­ர­வின்றிவளர்ந்த நாடு­களின் பொரு­ளா­தாரம் நக­ராது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2016
00:24

புது­டில்லி:‘‘இந்­தியா மற்றும் அதன் சேவைகள் துறையின் பங்­க­ளிப்­பின்றி, வளர்ந்த நாடுகள் பல­வற்றின் பொரு­ளா­தாரம் நக­ராது,’’ என, மத்­திய வர்த்­தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்­மலா சீதா­ராமன் தெரி­வித்து உள்ளார்.
அதி­க­ளவில் முத­லீடு:அவர், டில்­லியில், பொரு­ளா­தார கருத்­த­ரங்கு ஒன்றில் பேசி­ய­தா­வது:மத்­திய அரசு, தயா­ரிப்பு மற்றும் சேவைகள் துறையில், வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்கி, பொரு­ளா­தார வளர்ச்சியை ஊக்­கு­ விக்கும் நட­வ­டிக்­கை­களில், முனைப்­புடன் செயல்­பட்டுவரு­கி­றது.
தயா­ரிப்பு மற்றும் சேவைகள் துறைக்கு தேவை­யான வல்­லு­னர்­களை உரு­வாக்க, இளை­ஞர்­க­ளுக்­கான திறன் மேம்­பாட்டு திட்­டங்­க­ளுக்கு, அதி­க­ளவில் முத­லீடு மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. மத்­திய அரசு, தேசிய திறன் மேம்­பாட்டுக் கழகம் மூலம், இளை­ஞர்­களின் திற­னாற்­றலை ஊக்­கு­விக்கும் திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வரு­கி­றது.
இந்த திட்­டங்கள் மூலம், வரும் ஆண்­டு­களில், பல்­வேறு துறை­க­ளுக்கு தேவை­யான வல்­லு­னர்கள் உரு­வாவர். அவர்­களில், தயா­ரிப்பு மற்றும் சேவைகள் துறையில், ஏரா­ள­மானோர் வேலை­வாய்ப்பு பெறுவர். அதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.
மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், தயா­ரிப்புத் துறையின் பங்­க­ளிப்பு, 13 – 14 சத­வீ­த­மாக உள்­ளது. இதை, வரும் ஆண்­டு­களில், 25 சத­வீ­த­மாக உயர்த்த, முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. தற்­போது, இந்­திய பொரு­ளா­தா­ரத்தின் முது­கெ­லும்­பாக, சேவைகள் துறை உள்­ளது. இத்­து­றையின் பங்­க­ளிப்பு, 50 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மாக உள்­ளது. இதை, மேலும் உயர்த்த, மத்­திய அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை களை எடுத்து வரு­கி­றது. சில நாடுகள், உள்­நாட்டு மக்­களின் வேலை­வாய்ப்பை அதி­க­ரிப்­ப­தற்கு முக்­கி­யத்­துவம் அளிக்கத் துவங்­கி­யுள்­ளன.
தய­வின்றி நக­ராது:இது, இந்­தி­யா­விற்கு சவா­லாக இருக்கும் என்­பதில், சிறிதும் சந்­தேகம் இல்லை. இருந்த போதிலும், சேவைகள் துறையை பொறுத்­த­வரை, அதில் ஜாம்­ப­வா­னாக விளங்கும் இந்­தியா போன்ற ஒரு­சில நாடு­களை, வேறு எந்த நாடும் ஒதுக்கி விட முடி­யாது.
இந்­தியா மற்றும் அதன் சேவைகள் துறையின் பங்­க­ளிப்­பின்றி, எதையும் செய்ய முடி­யாது என்­பது, அந்­நா­டு­க­ளுக்கு தெளி­வாக தெரியும். வளர்ந்த பல நாடு­களின் பொரு­ளா­தாரம், இந்­திய சேவைகள் துறையின் தய­வின்றி நக­ராது.இந்­திய ஐ.டி., துறையைச் சேர்ந்த வல்­லு­னர்கள், வெளி­நா­டு­களில் தற்­கா­லி­க­மாக பணி­யாற்­று­வ­தற்­கான கட்­டுப்­பா­டு­களை நீக்கு­வது குறித்து, பல நாடு­க­ளுடன் பேச்சு நடத்தி வரு­கிறோம். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)