சிமென்ட் தேவை 20 சத­வீதம் குறையும்சிமென்ட் தேவை 20 சத­வீதம் குறையும் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.23 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.23 ...
மோடி அரசு எடுத்த நட­வ­டிக்கை சரியே’ ; உலக பொரு­ளா­தார நிபுணர் கை சோர்மன் பாராட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2016
05:42

புது­டில்லி : ‘‘பிர­தமர் மோடி தலை­மை­யி­லான, மத்­திய அரசு எடுத்­துள்ள பல்­வேறு நட­வ­டிக்­கை­களால், இந்­தியா, வியா­பா­ரத்­திற்கு உகந்த இடம் என, அன்­னிய முத­லீட்­டா­ளர்கள் கரு­து­கின்­றனர்,’’ என, உலகப் புகழ் பெற்ற, பொரு­ளா­தார நிபுணர் கை சோர்மன் தெரி­வித்து உள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, கை சோர்மன், ‘பொரு­ளா­தாரம் பொய் பேசாது: சிக்­க­லான நேரத்தில் தாராள சந்­தையின் தற்­காப்பு’ என்­பது உட்­பட, புகழ் பெற்ற ஆய்வு நுால்கள் பல­வற்றை எழு­தி­யுள்ளார்.
உகந்த நாடுஅவர், செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறி­ய­தா­வது: கடந்த இரண்­டரை ஆண்டு கால மோடியின் ஆட்சி, உள்­நாடு மற்றும் வெளி­நா­டு­களில் உள்ள தொழில் முனை­வோர்­க­ளுக்கும், அன்­னிய முத­லீட்­டா­ளர்­க­ளுக்கும், சரி­யான சமிக்­ஞையை அனுப்­பி­யுள்­ளது. இதன் கார­ண­மாக, இந்­தியா, தற்­போது வர்த்­தகம் புரி­வ­தற்கு மிகவும் உகந்த நாடாக கரு­தப்­ப­டு­கி­றது; இது, மோடிக்கு கிடைத்த வெற்றி. பொதுத் துறையில் உள்ள அதி­கா­ர­வர்க்­கமும், கட்­டுப்­பா­டு­களும் தான், ஒரு நாட்டின் பொரு­ளா­தார மாற்­றத்­திற்கு, மிகப்­பெ­ரிய தடைக்­கற்­க­ளாக உள்­ளன.
இந்த இரு அம்­சங்­க­ளையும், மத்­திய மற்றும் மாநில அர­சு­களின் சுய­நல அர­சி­யலை மீறி, அழித்­தொ­ழிப்­பது என்­பது, மிகக் கடி­ன­மான பணி­யாகும். அதனால், மந்த கதியில் நடை­பெற்று வரும் பல்­வேறு அரசு துறை திட்­டங்­க­ளுக்கு, மோடியை குறை கூறு­வதில் எவ்­வித நியா­யமும் இல்லை.
தகுந்த பலன்எனினும், அவரின், ‘இந்­தி­யாவில் தயா­ரிப்போம்’ திட்டம், ஏற்­று­ம­திக்கு உத­வாமல், மிகவும் பல­வீ­ன­மான நிலையில் உள்­ளது என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை. இத்­திட்­டத்தின் அனைத்து சாத­க­மான அம்­சங்­க­ளையும், இந்­திய அரசும், வணிக நிறு­வ­னங்­களும், சர்­வ­தேச அளவில் பிர­ப­லப்­ப­டுத்த வேண்டும்; அது, இந்­தி­யாவை, வெறும் சுற்­றுலா தலம் என்­ற­ளவில், முன்­னி­றுத்­து­வ­தாக இருக்கக் கூடாது. ற்­க­னவே, இத்­திட்டம் குறித்து மேற்­கொள்­ளப்­பட்டு வரும் பிர­சாரம், திருப்­தி­ய­ளிக்கக் கூடி­ய­தாக இல்லை. மத்­திய அரசு, அன்­னிய நேரடி முத­லீ­டு­களை ஊக்­கு­விக்க, ஏரா­ள­மான நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது; அதற்கு, தகுந்த பலன் கிடைக்கும்.இவ்­வாறு அவர் கூறினார்.
விறு­விறு உயர்வுமத்­திய அரசு, அன்­னிய நேரடி முத­லீ­டு­களை ஈர்க்க, தாரா­ள­ம­ய­மாக்கல் உட்­பட, பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது. இதன் விளை­வாக, கடந்த, 2015 – 16ம் நிதி­யாண்டில், இந்­தி­யாவில் மேற்­கொள்­ளப்­பட்ட அன்­னிய நேரடி முத­லீடு, 29 சத­வீதம் உயர்ந்து, 4,000 கோடி டால­ராக அதி­க­ரித்து உள்­ளது. இது, முந்­தைய, 2014 – 15ம் நிதி­யாண்டில், 3,094 கோடி ரூபாய் என்­ற­ளவில் குறைந்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)