பதிவு செய்த நாள்
23 நவ2016
05:44
மும்பை : மத்திய அரசின், கரன்சி சீர்திருத்த திட்டத்தால், பருத்தி ஏற்றுமதி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலகில், பருத்தி அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில், இந்தியா, முன்னணியில் உள்ளது. இங்கிருந்து, ஆண்டுதோறும், 10 கோடி பருத்தி பொதிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பருத்தி சப்ளை செய்யும் விவசாயிகளுக்கு, ஏற்றுமதியாளர்கள் ரொக்கமாக பணம் வழங்குகின்றனர். இந்நிலையில், செல்லாத ரூபாய் நோட்டு பிரச்னை காரணமாக பருத்தி ஏற்றுமதியாளர்கள், விவசாயிகளுக்கு, பணம் தர முடியவில்லை. இதையடுத்து, பருத்தி ஏற்றுமதி தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது.
இது குறித்து, பருத்தி ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது: பருத்தி சந்தை பருவம், அக்., மாதம் துவங்கியது. மத்திய அரசின் நடவடிக்கையால், பருத்தி சப்ளை செய்யும் விவசாயிகளுக்கு, பணம் தர முடியவில்லை. அவர்கள் சப்ளையை நிறுத்தியுள்ளதால், ஏற்றுமதி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால், இந்தியாவுக்கு போட்டியாக உள்ள அமெரிக்கா, பிரேசில், ஆப்ரிக்க நாடுகளின் பருத்தி ஏற்றுமதி அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|