பதிவு செய்த நாள்
26 நவ2016
07:38
மும்பை : தைவான், 50 கோடி டாலர் மதிப்பிலான ஜவுளி பொருட்களை, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளது.
இந்தியாவில் உற்பத்தியாகும் ஜவுளி பொருட்கள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்நாடுகளில் இருந்தும், இந்தியாவுக்கு ஜவுளி பொருட்கள் இறக்குமதியாகின்றன.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், ஜவுளித் துறை கண்காட்சி நடந்தது. அதில், தைவான் நாட்டின் ஜவுளித் துறை அதிகாரி பேசியதாவது: தைவான் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு, இந்தியாவில், அதிக சந்தை வாய்ப்புகள் உள்ளன. இந்தியா, வங்க தேசம், இலங்கை ஆகிய மூன்று நாடுகளில், ஜவுளி பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே, தைவான், அந்நாடுகளுக்கு, அதிக ஜவுளி பொருட்களை ஏற்றுமதி செய்யும். இந்தியா – தைவான் இடையிலான பரஸ்பர வணிகம், 2001ல், 119 கோடி டாலராக இருந்தது. இது, 2014ல், 600 கோடி டாலராக அதிகரித்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், தைவானில் இருந்து, இந்தியாவுக்கு, 50 கோடி டாலர் மதிப்பிலான ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|