பதிவு செய்த நாள்
26 நவ2016
07:39
புதுடில்லி : ‘நிடி ஆயோக்’ அமைப்பின், தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறியதாவது: பிரான்ஸ், இத்தாலி போல, இந்தியாவும், சொந்தமாக ஆடம்பர, ‘பிராண்டு’ பொருட்களை உருவாக்க வேண்டும். ஏனெனில், குறிப்பிட்ட காலத்திற்கு பின், பிராண்டு பொருட்களுக்கு மதிப்பு உயரும். இந்தியாவில், முதல் நிலை நகரங்களில் நிலத்தின் விலையும், வாடகையும் அதிகம். அதனால், ஆடம்பர பிராண்டுகள் துறை வளர்ச்சி காண வேண்டுமென்றால், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், கவனம் செலுத்துவது அவசியம். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், நிலத்தின் மதிப்பு வீழ்ச்சி அடையும். இதை, ஆடம்பர பிராண்டு சந்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உயர் வருவாய் பிரிவினர் அதிகளவில், ஆடம்பர பிராண்டு பொருட்களை வாங்குகின்றனர். அவற்றுக்கு, இளையோரிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. இதர நாடுகளில், முதியோர் எண்ணிக்கை பெருகும் சூழலில், இந்தியாவில், இளையோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இச்சூழல், 2040 வரை நிலவும் என்பதால், ஆடம்பர பிராண்டுகளும் வளர்ச்சி காணும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|