பதிவு செய்த நாள்
26 நவ2016
07:39
புதுடில்லி : ஹீரோ நிறுவனம், புதிய மாடலில், ‘இ – சைக்கிள்’களை அறிமுகம் செய்துள்ளது.
உள்நாட்டில், ஹீரோ சைக்கிள்ஸ், சைக்கிள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ‘லெக்ட்ரோ’ பிராண்டில், நான்கு, இ – சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது, புதிய சைக்கிள், பெங்களூரு, மும்பை, புனே, டில்லியை சுற்றிய பகுதி ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதை தொடர்ந்து, தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் விற்கப்பட இருக்கிறது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவில், எலக்ட்ரிக் சைக்கிள்களுக்கு, அதிக சந்தை வாய்ப்புள்ளது. எனவே, எங்கள் நிறுவனம், எலக்ட்ரிக் பெடல் வசதி உள்ள, இ – சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், அந்த சைக்கிளில், சுலபமாக, நீண்ட துாரம் ஒட்டி செல்ல முடியும். அதிக துாரம் சென்றாலும், காலில் வலி ஏற்படாது. புதிதாக அறிமுகம் செய்த சைக்கிள்களின் விலை, 42 ஆயிரம் ரூபாய் முதல், 83 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. இதே மாடலில், விரைவில், 20 வகையான சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|