‘மின்­னணு கால்­நடை சந்தை:’ மத்­திய அரசின் புதிய திட்டம்‘மின்­னணு கால்­நடை சந்தை:’ மத்­திய அரசின் புதிய திட்டம் ... சுங்க சாவடிகளில் இனி வண்டி நிற்காது சுங்க சாவடிகளில் இனி வண்டி நிற்காது ...
விசைத்­தறி துறை வளர்ச்­சிக்கு இரண்டு புதிய திட்­டங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2016
07:42

புது­டில்லி : ‘‘நலி­வுறும் நிலையில் உள்ள, விசைத்­தறி துறையை மேம்­ப­டுத்த, இரு புதிய திட்­டங்கள் பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கின்­றன,’’ என, மத்­திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, லோக்­ச­பாவில் தெரி­வித்து உள்ளார்.
அவர், மேலும் பேசி­ய­தா­வது:மஹா­ராஷ்­டிரா, குஜராத் போன்ற மாநி­லங்­களில் உள்ள, விசைத்­தறி தொழிற்­சா­லைகள், குறைந்த உற்­பத்தித் திறனில் செயல்­பட்டு வரு­கின்­றன. அதி­க­ரித்­துள்ள மூலப் பொருட்கள் செல­வினம், ஜவுளி கொள்­மு­தலில் ஏற்­பட்­டுள்ள சரிவு போன்­ற­வற்றால், இதர, தொழிற்­பேட்­டை­களில் உள்ள, ஒரு­சில விசைத்­தறி தொழிற்­சா­லைகள், பாதி நாட்கள் தான் இயங்­கு­கின்­றன. இதை கருத்தில் கொண்டு, ‘புதிய விசைத்­தறி கடன் திட்டம்’ மற்றும் ‘சூரிய மின் சக்தி திட்டம்’ என்ற, இரு புதிய ஊக்­கு­விப்பு திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வது குறித்து, அமைச்­சகம் பரி­சீ­லித்து வரு­கி­றது.
ஜவுளி அமைச்­சகம், நாட்டின் ஆயத்த ஆடைகள் துறையின் மேம்­பாட்­டுக்­காக, 6,000 கோடி ரூபாய்க்கு, சிறப்பு ஊக்­கு­விப்பு திட்­டத்தை அறி­வித்­துள்­ளது. இத்­திட்­டத்தின் கீழ், ஜவுளித் துறையில், வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வ­தற்கு, சிறப்பு ஊக்­கத்­தொகை வழங்­கப்­ப­டு­கி­றது. மாநில அர­சு­க­ளுக்கு செலுத்­திய வரியை திரும்ப பெறவும், வரு­மான வரிச் சட்டம், 80 ஜே.ஜே.ஏ.ஏ., பிரிவின் கீழ், வரி­வி­லக்கு கோரும் சலு­கையும் அளிக்­கப்­ப­டு­கி­றது. தொழி­லாளர் சட்ட விதி­மு­றைகள் தளர்த்­தப்­பட்டு உள்­ளன. அது போல, விசைத்­தறி துறையின் வளர்ச்­சிக்கும், பல்­வேறு ஊக்­கு­விப்பு திட்­டங்­களை, அமைச்­சகம் செயல்­ப­டுத்தி வரு­கி­றது. சாதா­ரண விசைத்­தறி தொழி­ல­கங்­களை, நவீ­ன­ம­ய­மாக்கும் திட்டத்துடன் விசைத்­த­றி­யா­ளர்கள் குழு­, தொழிற்­கூடம் கட்ட, ‘குழு தொழிற்­கூட திட்டம்’ மூலம், நிதி­யு­தவியும் வழங்­கப்­ப­டு­கி­றது. அத்­துடன், ஐ.எஸ்.பி.எஸ்.டி., திட்­டத்தின் கீழ், ஒருங்­கி­ணைந்த விசைத்­தறி துறையின் வளர்ச்­சிக்கு, பல நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.
குறிப்­பாக, விற்­ப­னை­யாளர் – நுகர்வோர் சந்­திப்­புக்கு ஏற்­பாடு செய்தல், நுாலிழை வங்­கிகள் மற்றும் சேவை மையங்கள் அமைத்தல் உள்­ளிட்ட பணிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அரசின், ஜவுளித் துறை வளர்ச்சி திட்­டங்கள் குறித்து, விழிப்­பு­ணர்வு கருத்­த­ரங்­குகள் நடத்­தப்­ப­டு­கின்­றன. சமூக பாது­காப்­புக்­காக, ஜவுளித் துறை­யி­ன­ருக்கு, குழு காப்­பீட்டு திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)