அண்மை ஏடிஎம்.,களில் பணம் உள்ளதா என்பதை அறிய உதவும் 5 ஆப்ஸ்அண்மை ஏடிஎம்.,களில் பணம் உள்ளதா என்பதை அறிய உதவும் 5 ஆப்ஸ் ... ஐநாக்ஸ் தியேட்டர்களிலும் இனி பணம் எடுத்துக் கொள்ளலாம் ஐநாக்ஸ் தியேட்டர்களிலும் இனி பணம் எடுத்துக் கொள்ளலாம் ...
ஆஸ்திரேலியாவில் 2 சோலார் மின் உற்பத்தி ஆலைகளை அமைக்கும் அதானி குழுமம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2016
13:28

சிட்னி : இந்திய தொழிலதிபர் அதானியின் எரிசக்தி நிறுவனமானது, ஆஸ்திரேலியாவில் இரண்டு சோலார் மின்னுற்பத்தி ஆலையை அமைக்கிறது.
இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை மையமாக கொண்டு செயல்படுகிறது அதானி குழுமம். இது ஒரு பன்னாட்டு குழும நிறுவனமாகும். இதன் நிறுவனர் கவுதம் அதானி. இந்நிலையில், இந்நிறுவனமானது ஆஸ்திரேலியாவில் இரண்டு சோலார் மின்னுற்பத்தி ஆலையை கட்டுகிறது. இது ரூ.2053 கோடி மதிப்பிலான திட்டம் ஆகும். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாநிலம் கலீலி பள்ளத்தாக்கு பகுதியில் அதானி குழுமம் அமைக்கவுள்ள மிகப் பெரிய நிலக்கரி சுரங்க பணிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதானி குழுமம் தற்போது ஆஸ்திரேலியாவில் சோலார் மின்னுற்பத்தி ஆலை அமைக்கும் பணிகளை அடுத்த ஆண்டு தொடங்குகிறது.
இது குறித்து அதானி கூறுகையில்: ஆஸ்திரேலியாவில் 120 மற்றும் 150 மெகாவாட்ஸ் ஆற்றல் கொண்ட இரண்டு பெரிய சோலார் மின்னுற்பத்தி ஆலைகளை அந்நாட்டின் இரும்பு நகரமான ஒயல்லாவில் கட்டுகிறோம். அதேபோல், 100 முதல் 200 மெகாவாட் திறன் கொண்ட சோலார் மின்னுற்பத்தி ஆலைகளை முன்னாள் நிலக்கரி நகரமான மொரன்பக்கில் கட்டுகிறோம் என்றார்.
இது குறித்து தெற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த அந்நாட்டு பார்லி., பிரதிநிதி எட்டீ ஹகீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சோலார் மின்னுற்பத்தி ஆலை கட்டுவதற்கு ஒயல்லாவை சரியான இடமாக முன்னிறுத்தி இருக்கிறோம். எங்களிடம் சூரிய ஒளி, நிலம், தொழிலாளர்கள் மற்றும் ஆதரவான சமுதாயம் ஆகியவை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)