‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ தர கட்­டுப்­பாடுதிட்­டத்தை தள்ளி வைக்க கோரிக்கை‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ தர கட்­டுப்­பாடுதிட்­டத்தை தள்ளி வைக்க கோரிக்கை ... ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி  எப்படி செயல்படுகிறது? ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி எப்படி செயல்படுகிறது? ...
மத்­திய அரசின் கரன்சி நட­வ­டிக்­கையால்நிறு­வ­னங்­களின் காலாண்டு வளர்ச்சி பாதிக்கும்:இந்­திய பொரு­ளா­தாரம் புதிய நிலைக்கு திரும்பும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2016
01:00

புது­டில்லி:‘‘மத்­திய அரசின், செல்­லாத ரூபாய் நோட்டு அறி­விப்பால், கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களின் காலாண்டு வளர்ச்சி பாதிக்கும்; இருந்த போதிலும், நாட்டின் பொரு­ளா­தாரம், விரைவில், புதிய முறை­யி­லான இயல்பு நிலைக்கு திரும்பும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்­மலா சீதா­ராமன் தெரி­வித்து உள்ளார். அவர், மேலும் கூறி­ய­தா­வது:மத்­திய அரசின் நட­வ­டிக்­கையை தொடர்ந்து, மொத்த பணப்­பு­ழக்­கத்தில், 86 சத­வீ­தத்தை திரும்பப் பெறும் பணி நடை­பெற்று வரு­கி­றது.
இதே அள­விற்கு புதிய கரன்­சியை, உட­ன­டி­யாக, புழக்­கத்தில் விடு­வது என்­பது முடி­யாத காரியம். எனினும், அதற்­கான தீவிர முயற்­சியை, மத்­திய அரசும், ரிசர்வ் வங்­கியும் மேற்­கொண்டு உள்­ளன. இருந்த போதிலும், கரன்சி தட்­டுப்­பாடு, மந்­த­மான உற்­பத்தி, தேவைப்­பாடு குறைந்­துள்­ளது போன்ற பிரச்­னைகள், நிறு­வ­னங்­களின் வளர்ச்­சியில்தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும்.
நடப்பு, அக்., – டிச.,வரை­யி­லான மூன்­றா­வது காலாண்டில், கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களின் வளர்ச்சி பாதிக்கும். அதே சமயம், இது தற்­கா­லிக பாதிப்பு தான்; நீண்ட நாட்­க­ளுக்கு தொட­ராது; மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். அது, முன்­பி­ருந்­தது போலஅல்­லாமல், புதி­தாக இருக்கும். அதா­வது, பணப் பரி­மாற்­றங்­களில், வெளிப்­படைத் தன்மை அதி­க­ரிக்கும்; அதி­க­ளவில் காசோ­லைகள், ‘கிரெடிட், டெபிட் கார்­டு’கள், ‘இ – வாலெட்’ எனப்­படும், மின்­னணு பணப் பைகள் வாயி­லான, பணப்பரி­வர்த்தனைகள் பெருகும். இவ்­வாறு அவர் கூறினார்.
மத்­திய அரசு, 500 – 1,000 ரூபாய் நோட்­டுகள் செல்­லாது என, 8ம் தேதி, அறி­வித்­தது. அத்­துடன், செல்­லாத கரன்­சியை மாற்­றவும், புதிய கரன்­சியை பெறவும், பல்­வேறு கட்­டுப்­பா­டு கள் விதிக்­கப்­பட்டு உள்­ளன. பணத் தட்­டுப்­பாடு கார­ண­மாக, மூலப் பொருட்­களை வாங்­கவும், ஊழி­யர்­க­ளுக்கு ஊதியம் வழங்­கவும் முடி­யாமல், வர்த்­த­கர்­களும், தயா­ரிப்பு நிறு­வ­னங்­களும் திணறி வரு­கின்­றன.
இந்த பணத் தட்­டுப்­பாடு பிரச்­னையை, 50 நாட்­க­ளுக்கு பொறுத்துக் கொள்­ளு­மாறு, பிரதமர் மோடி கேட்டுக் கொண்­டு உள்ளார்.செல்­லாத ரூபாய் நோட்டு தொடர்­பான, மத்­திய அரசின் நட­வ­டிக்கை, சமீப காலத்­திற்கு, பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களை பாதிக்கும்; நாட்டின் வளர்ச்சி பல­வீ­ன­மாகும். அதே சமயம், இந்­ந­ட­வ­டிக்­கையால், நீண்ட கால அடிப்­ப­டையில் நன்மை விளையும்; அரசின் வரி வருவாய் அதி­க­ரிக்கும். நாட்டு மக்­க­ளி­டையே, வங்கி சார்ந்த பரி­வர்த்­த­னைகள் பெருகும்.மூடிஸ் இன்­வெஸ்ட்மென்ட் சர்­வீசஸ்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)