மத்­திய அரசின் கரன்சி நட­வ­டிக்­கையால்நிறு­வ­னங்­களின் காலாண்டு வளர்ச்சி பாதிக்கும்:இந்­திய பொரு­ளா­தாரம் புதிய நிலைக்கு திரும்பும்மத்­திய அரசின் கரன்சி நட­வ­டிக்­கையால்நிறு­வ­னங்­களின் காலாண்டு வளர்ச்சி ... ... இணையம் இல்­லாமல் பண பரி­வர்த்­தனை வசதி! இணையம் இல்­லாமல் பண பரி­வர்த்­தனை வசதி! ...
ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி எப்படி செயல்படுகிறது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2016
04:59

புதிய வகை வங்கியான, பேமென்ட்ஸ் வங்கி துவக்க அனுமதி பெற்ற நிறுவனங்களில், ஏர்டெல் நிறுவனம், முதல் பேமென்ட்ஸ் வங்கியை துவக்கியுள்ளது. பார்தி என்டர்பிரைசின் துணை நிறுவனமான, ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி, முதற்கட்டமாக, ராஜஸ்தான் மாநிலத்தில், மாதிரி சேவையை துவக்கியுள்ளது. அடுத்தகட்டமாக, நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது.அனைவருக்கும் வங்கி சேவை அளிக்கும் நோக்கத்துடன், பேமென்ட்ஸ் வங்கிக்கான அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வங்கிகள், சிறிய அளவில், 'டிபாசிட்'களை ஏற்கலாம். ஆனால், இவை கடன் வழங்க அனுமதி இல்லை.ஆதார் அவசியம்!இந்த வரிசையில், முதல் துவங்கப்பட்டுள்ள, ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி பற்றி ஒரு பார்வை;இந்த வங்கியில், யார் வேண்டுமானாலும் கணக்கு துவங்கலாம். கணக்கு துவங்குவதற்கு ஆதார் அட்டை அவசியம். ஆனால், ஏர்டெல் சந்தாதாரராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
ஏர்டெல் மையங்களை அணுகி ஆதார் அட்டையை காண்பித்து, வங்கிக் கணக்கை துவக்கிக் கொள்ளலாம். காகிதமில்லா நடைமுறையில் கணக்கு துவக்கப்படும். ஆதார் தகவல்கள் மூலம், கே.ஒய்.சி., தகவல்கள் சரிபார்க்கப்படும்.பேமென்ட்ஸ் வங்கிகள், ஏ.டி.எம்., அல்லது டெபிட் கார்டுகள் வழங்கலாம். எனினும், ஏர்டெல் வங்கி, முதற்கட்டமாக, டெபிட் கார்டு வழங்குவதில்லை என, தீர்மானித்துள்ளது. ஏர்டெல் மையங்களில் பணம் செலுத்தலாம். அதே முறையில், பணம் பெற்றுக் கொள்ளலாம். இந்த மையங்கள், வங்கி மையங்கள் போல செயல்படும்.
வட்டி விகிதம்!
காகிதமில்லா நடைமுறை பின்பற்றப்படும் என்பதால், வங்கிக் கணக்கில் உள்ள தொகையை மொபைல் போன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஏர்டெல் மணி செயலியையும் இதற்காக பயன்படுத்தலாம். குறுஞ்செய்தி வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செயலி மூலம் அல்லது யு.எஸ்.எஸ்.டி., வசதி மூலம் பணப் பரிவர்த்தனை செய்யலாம்.பேமென்ட்ஸ் வங்கிகள், ஒரு லட்சம் வரை டிபாசிட் பெற்றுக் கொண்டு, அதன் மீது வட்டி வழங்கலாம். ஏர்டெல் வங்கி சேமிப்பு டிபாசிட்டிற்கு ஆண்டுக்கு, 7.25 சதவீத வட்டி வழங்கப்படும் என, தெரிவித்துள்ளது. மொபைல் வாலெட்கள் மற்றும் பேமென்ட் வங்கிகளுக்கு உள்ள, முக்கிய வேறுபாடாக வட்டி விகிதம் அமைகிறது.
இந்த வங்கிகள் வட்டி வழங்க அனுமதி உண்டு. மொபைல் வாலெட்களுக்கு அனுமதி இல்லை. பேமென்ட் வங்கிகள் பெறும் டிபாசிட் தொகையை, அரசு பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)