பதிவு செய்த நாள்
28 நவ2016
05:07
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் முதல் ஆண்டு பிரீமியம் தொகை, 30 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., வெளியிட்டுள்ள தகவலின் படி, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் முதல் ஆண்டு பிரீமியம், இந்த ஆண்டின் ஏப்., - அக்., வரையான காலத்தில், 87,344 கோடி ரூபாயாக உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 66,997 கோடி ரூபாயாக இருந்தது.எனினும், இந்த வளர்ச்சி பெரும்பாலும் ஒற்றை பிரீமியம் மற்றும் குழு காப்பீட்டு திட்டங்கள் மூலம் வந்திருப்பதாக, காப்பீட்டு துறை நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.
தனிநபர்களுக்கான வழக்கமான பாலிசிகள் பிரிவில், முதல் ஆண்டு பிரீமியம், 14.4 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இந்த பிரிவே, நீண்ட கால வளர்ச்சிக்கான அடையாளமாக கருதப்படுகிறது. குழு சிங்கிள் பிரீமியம் பிரிவில், பிரீமியம் வருவாய், 9,904 கோடி ரூபாய் உயர்வை கண்டுள்ளது. இந்த பிரிவில், நீண்ட கால வளர்ச்சி சாத்தியமில்லை என, வல்லுனர்கள் கருதுகின்றனர்.-
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|