காப்பீடு பிரீமியம் வருவாய் 30 சதவீதம் உயர்வு காப்பீடு பிரீமியம் வருவாய் 30 சதவீதம் உயர்வு ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.57 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.57 ...
வைப்பு நிதி முத­லீட்­டா­ளர்கள் என்ன செய்ய வேண்டும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2016
05:11

வங்­கி­களில், ‘டிபாசிட்’ குவியும் நிலையில், வட்டி விகிதம் குறையும் சூழல் ஏற்­பட்­டுள்­ளதால், முத­லீட்­டா­ளர்­களின் அணு­கு­முறை எப்­படி அமைய வேண்டும்?ரூபாய் நோட்டு செல்­லாது என்ற அறி­விப்பால், பொது­மக்கள், வங்­கி­களில் பழைய நோட்­டு­களை, டிபாசிட் செய்து வருகின்­றனர். வீட்டில், அவசரத் தேவை மற்றும் சேமிப்­பிற்­காக என, வைத்து இ­ருந்த தொகை­யையும், டிபாசிட் செய்து வரு­கின்­றனர். இதனால், வங்­கி­களில் டிபாசிட் செய்­யப்­படும் தொகை அதி­க­ரித்­துள்­ளது.
இது­வரை, ஆறு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், டிபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. டிபாசிட் தொகை அதி­க­ரித்து வரு­வதால், வங்­கிகள் டிபா­சிட்­டிற்கு அளிக்கும் வட்டி விகிதம் குறை­யலாம் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அமைப்­பிற்குள் அதிக பணம் வந்­துள்ள, நிலை வட்டி விகி­தத்தின் மீது தாக்கம் செலுத்தும் என, வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். மேலும், பண­வீக்க விகி­தமும் கட்­டுக்குள் இருப்­பதால், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகி­தத்தை குறைக்கும் வாய்ப்பு இருப்­ப­தா­கவும் கரு­தப்­ப­டு­கி­றது. டிச., 7ல், ரிசர்வ் வங்கி, நிதிக் கொள்­கையில் இதற்­கான முடிவை அறி­விக்­கலாம் என, எதிர்­பார்க்­கப்ப­டு­கி­றது. 25 முதல், 50 அடிப்­படை புள்­ளிகள் வரை வட்டி விகிதம் குறைக்­கப்­பட வாய்ப்பு இருப்­ப­தா­கவும், நிதித் துறை வட்­டா­ரங்­களில் கரு­தப்­ப­டு­கி­றது.
மாற்று வாய்ப்­புகள்
வட்டி விகிதம் குறையும் சூழலில், வைப்பு நிதி­க­ளுக்­கான வட்டி விகிதம் மேலும் குறைக்­கப்­ப­டலாம். இது, அவற்றின் மூலம் கிடைக்கும் பலன் மீது தாக்கம் செலுத்தும். ஏற்­க­னவே, வைப்பு நிதி மூலம் பலன் குறை­வாக இருப்­ப­தாக கருத்து நில­வு­கி­றது. இந்த சூழலில், வைப்பு நிதி முத­லீட்­டா­ளர்கள் தங்கள் அணு­கு­முறை பரி­சீ­லனை செய்யும் நிலை உண்­டாகும். இந்­நி­லையில், பலரும் அஞ்­ச­லக டிபாசிட் மற்றும் அரசு பத்­தி­ரங்­களை நாடத் துவங்­கி­யி­ருப்­ப­தாக வல்­லு­னர்கள் தெரி­விக்­கின்­றனர்.
வங்கி வைப்பு நிதி­க­ளுக்கு, 7 சத­வீதம் வரை வட்டி கிடைக்­கி­றது. அஞ்­ச­லக சேமிப்­பிற்கு, 7.8 சத­வீத வட்டி மற்றும் அரசு பத்­தி­ரங்­க­ளுக்கு, 8 சத­வீத வட்டி கிடைக்­கி­றது. எனவே, பலரும் இவற்றை நாடி வரு­வ­தாக வல்­லு­னர்கள் தெரி­விக்­கின்­றனர். வைப்பு நிதி வட்டி வரு­மா­னத்தை சார்ந்­தி­ருக்கும் ஓய்வு பெற்­ற­வர்கள் மற்றும் இதர முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, அரசு சேமிப்பு பத்­தி­ரங்கள் ஏற்­றவை என, வல்­லு­னர்கள் கூறு­கின்­றனர். இவை, ஆறு ஆண்டு காலம் கொண்­டவை. இவற்றில், 1,000 ரூபாய் முதல் முத­லீடு செய்­யலாம். ஆனால், இவற்றில் பணத்தை உட­ன­டி­யாக எடுத்துக் கொள்ளும் வசதி இல்­லா­ததை, மனதில் கொள்ள வேண்டும் என்­கின்­றனர்.
கடன் பத்­தி­ரங்கள்
சேமிப்பு பத்­தி­ரங்கள் தவிர, டெப்ட் பண்டு ரகத்தைச் சேர்ந்த, மியூச்­சுவல் பண்டு திட்­டங்­க­ளையும், முத­லீட்­டா­ளர்கள் பரி­சீ­லிக்­கலாம் என்று வல்­லு­னர்கள் சொல்­கின்­றனர். வட்டி விகிதம் குறையும் சூழலில், இவை ஏற்­ற­தாக இருக்கும் என்­கின்­றனர். இளம் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, இவை உகந்­தவை என்ற கருத்தும் இருக்­கி­றது.
மேலும், வரி இல்லா பத்­தி­ரங்­க­ளையும் பரி­சீ­லிக்­கலாம் என்­கின்­றனர். குறிப்­பாக, அதிக வரிப்­பி­ரிவில் இருப்­ப­வர்­க­ளுக்கு, இவை ஏற்­ற­வை­யாக இருக்கும் என, கரு­தப்­ப­டு­கி­றது. வரி இல்லா பத்­தி­ரங்கள் வெளி­யி­டப்­பட்ட போது, முத­லீட்­டா­ளர்­க­ளிடம் நல்ல வர­வேற்பை பெற்­றன. எனினும், இந்த நிதி­யாண்டில் புதிய வெளி­யீ­டுகள் இல்லை. எனினும், இவற்றை பங்­குச்­சந்தை பரி­வர்த்­தனை மூலம் வாங்கும் வாய்ப்பு உள்­ளது.இது போலவே, வர்த்­தக நிறு­வ­னங்கள் டிபாசிட் திட்­டங்­க­ளையும் பரி­சீ­லிக்­கலாம் என்ற கருத்தும் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. இவற்­றுக்­கான வட்டி விகிதம் அதிகம் என்றாலும், பாது­காப்பு அம்சம், ரேட்டிங் உள்­ளிட்ட அம்­சங்­களை கவ­னத்தில் கொள்ள வேண்டும்.
உண்­டியல் சேமிப்பு
இதே போலவே, வீட்டில் குழந்­தைகள் கல்வி மற்றும் எதிர்­கால செல­விற்­காக, உண்­டி­யலில் சேமித்து வைத்­தி­ருக்கும் பணத்­தையும் கூட, மியூச்­சுவல் பண்டு திட்­டங்­களில் முத­லீடு செய்­யலாம் என, வல்­லு­னர்கள் கூறு­கின்­றனர். தற்­போ­தைய சூழலில், இந்த தொகையும் வங்­கி­களில் டிபாசிட் செய்­யப்­பட்­டி­ருப்­பதால், இவற்றின் மீது நல்ல பலனை பெற, குழந்­தைகள் பெயரில், மியூச்­சுவல் பண்டு திட்­டத்தில் முத­லீடு செய்­யலாம் என, கூறு­கின்­றனர்.
குறைந்த தொகையில் கூட, முத­லீட்டை துவக்­கலாம் என்­கின்­றனர். எஸ்.ஐ.பி., என குறிப்­பி­டப்­படும், மாத அல்­லது காலாண்டு அடிப்­ப­டையில், குறிப்­பிட்ட தொகையை முத­லீடு செய்யும் திட்­டங்­க­ளையும் நாடலாம் என்­கின்­றனர். பிள்­ளைகள், 18 வயதை அடையும் வரை, பெற்றோர் அல்­லது பாது­கா­வலர் இவற்றை இயக்­கலாம். அதன்பின், உரிய சான்­றிதழ் சமர்ப்­பித்து, மேஜ­ரான பிள்ளைகள் இயக்கிக் கொள்­ளலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)