பதிவு செய்த நாள்
29 நவ2016
05:11
மும்பை:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, 100 கிராமங்களை, 100 நாட்களில், டிஜிட்டல் கிராமங்களாக மாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.
தனியார் துறையில், மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, நாடு முழுவதிலிருந்தும், 100 கிராமங்களை தேர்ந்தெடுத்து, டிஜிட்டல் முறையிலான பணப் பரிமாற்றங்கள், வணிக செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு பயிற்சி அளித்து, 100 நாட்களுக்குள் அவற்றை, டிஜிட்டல் கிராமங்களாக மாற்ற உள்ளது.இதற்காக, 10 ஆயிரம் கிராம மக்களுக்கு, இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள், வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்கவும், அங்கிருக்கும் சில்லரை விற்பனை கடைகளுக்கு, ரொக்கமில்லாத முறையில் பணப் பரிவர்த்தனை செய்வதற்கும், தேவையான வசதிகள் செய்து தரப்படும் என, வங்கி தரப்பு தெரிவிக்கிறது.
இது குறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, சாந்தா கோச்சர் கூறியதாவது:நாட்டின் வளர்ச்சியில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, தொடர்ந்து தன் பங்களிப்பை வழங்கி வருகிறது. நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு, தொழில்நுட்ப வசதிகள் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில், நாங்கள் மிக உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறோம். அப்படி தொழில்நுட்ப வசதிகளை வழங்கி, குஜராத் மாநிலத்தில் உள்ள, அகோதரா கிராமத்தை, இந்தியாவின் முதல் டிஜிட்டல் கிராமமாக, கடந்த ஆண்டில் மாற்றி இருக்கிறோம். அதே போல் இப்போதும், 100 நாட்களில், 100 கிராமங்களை, டிஜிட்டல் கிராமமாக மாற்ற இருக்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|