பதிவு செய்த நாள்
29 நவ2016
05:13
புதுடில்லி:மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:சுங்க வரி துறையின் செயல்பாடுகளில், காகித ஆவணங்களின் பயன்பாட்டை பெருமளவு குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, டிச., 1 முதல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள், சுங்க வரி துறையில், காகித ஆவணங்களுக்கு பதிலாக, மின்னணு ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடைமுறை அறிமுகமாகிறது. குறிப்பாக, ‘கார் 7’ விண்ணப்பங்கள், டி.ஆர்.6 படிவங்கள், கப்பல் போக்குவரத்து உரிமம், கப்பல் சரக்கு போக்கு வரத்து ரசீது, துறைமுக நுழைவு ரசீது உள்ளிட்டவற்றை, காகித ஆவணங்களில் அளிக்கத் தேவையில்லை; மின்னணு ஆவணங்களை அளித்தால், போதுமானது.
ஏற்கனவே, இறக்குமதியாளர்களில், 95 சதவீதம் பேர், மின்னணு முறையில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனால், சுங்கத் துறையில் அறிமுகமாகும், மின்னணு ஆவண நடைமுறைக்கு, இறக்குமதியாளர்கள் மிகச் சுலபமாக மாறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தால், ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள் மிக விரைவாக நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|