10 ஆண்­டுகள் வரி விலக்கு தேவை: மொபைல் போன் கூட்­ட­மைப்பு10 ஆண்­டுகள் வரி விலக்கு தேவை: மொபைல் போன் கூட்­ட­மைப்பு ... இந்­திய ஐ.டி., துறைநவீன தொழில்­நுட்­பங்­க­ளுக்கு வேக­மாக மாறினால் பெரிய அளவில் பாதிப்பு இருக்­காது இந்­திய ஐ.டி., துறைநவீன தொழில்­நுட்­பங்­க­ளுக்கு வேக­மாக மாறினால் பெரிய ... ...
இந்­திய பருத்தி: தடை விதித்­தது பாகிஸ்தான்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2016
05:18

இஸ்­லா­மாபாத்:இந்­தி­யா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பருத்­திக்கு, பாகிஸ்தான் அரசு தடை விதித்­தி­ருக்­கி­றது.இந்­தியா – பாகிஸ்தான் இடை­யே­யான சமீ­பத்­திய எல்லை பிரச்­னைகள் கார­ண­மாக, இந்­தி­யா­வி­லி­ருந்து பருத்தி மற்றும் காய்­க­றிகள் உள்­ளிட்­ட­வற்றை இறக்­கு­மதி செய்­வ­தற்கு தடை விதித்­தி­ருக்­கி­றது பாகிஸ்தான்.
இது குறித்து பேசிய, பாகிஸ்தான் பயிர் பாது­காப்பு துறையைச் சேர்ந்த அதி­கா­ரிகள், வாகா எல்­லை­யி­லி­ருந்தும் கராச்சி துறை­முகம் வழி­யா­கவும் வரும் காய்­க­றிகள் மற்றும் பருத்தி ஆகி­ய­வற்­றுக்கு, தற்­கா­லி­க­மாக தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது என தெரி­வித்­தனர்.பருத்தி இறக்­கு­ம­தியில் ஈடு­பட்­டுள்­ள­வர்கள் தரப்பில், எந்த முன்­ன­றி­விப்பும் இன்றி, இத்­தடை விதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­வித்­தனர்.
இவ்­வி­வ­காரம் குறித்து பேசிய, பயிர் பாது­காப்பு துறை தலைவர், இம்ரான் ஷாமி கூறி­ய­தா­வது:எங்கள் நாட்டு விவ­சா­யி­களை பாது­காக்க, நாங்கள் தக்­காளி உள்­ளிட்ட காய்­க­றி­களை இறக்­கு­மதி செய்­வ­தற்கு தடை விதித்­தி­ருக்­கிறோம். எங்­க­ளிடம் போது­மான அள­வுக்கு காய்­கறி சேமிப்பு இருக்­கி­றது. தட்­டுப்­பாடு ஏற்­ப­டும்­போது மட்டும் தான் இறக்­கு­மதி செய்து கொள்­கிறோம்.ஆனால், பருத்­திக்­கான தடைக்கு வேறு கார­ணங்கள் இருக்­கின்­றன.நாங்கள் பருத்­தியை இந்­தி­யா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­வதை நிறுத்­த­வில்லை. இந்­திய பருத்தி, எங்­க­ளு­டைய உயிரி பாது­காப்பு நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்­ட­தாக இல்லை என்ற அறிக்­கை­களால் நிறுத்தி வைத்­தி­ருக்­கிறோம்.
இது குறித்து விசா­ரித்து, அத்­த­கைய பிரச்­னைகள் எதுவும் இல்லை என்­பது நிரூ­பிக்­கப்­பட்டால், தடையை நீக்­கிவி­டுவோம்.எங்கள் நிபந்­த­னை­களை பூர்த்தி செய்யும் விதத்தில் இருப்­ப­தற்­கான சான்­றி­தழை பெற்ற பருத்­தியை மட்­டுமே இறக்­கு­ம­தி­யா­ளர்கள் சாலை வழி­யா­கவோ, துறை­முகம் மூல­மா­கவோ இறக்­கு­மதி செய்ய இயலும். இதற்­கி­டையே, இந்த தடை கார­ண­மாக, பாகிஸ்தான் ஜவுளி ஏற்­று­மதி பாதிப்­புக்கு உள்­ளாகி இருப்­ப­தாக, அத்­து­றையில் இருப்­ப­வர்கள் தெரி­வித்­தனர்.
அவர்கள் மேலும் தெரி­வித்­த­தா­வது:எங்கள் துறைக்கு, ஒரு கோடியே, 40 லட்சம் பொதிகள் தேவை. ஆனால், இந்த ஆண்டு உள்­நாட்டு உற்­பத்தி, ஒரு கோடியே, 12 லட்சம் பொதிகள் இருக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதனால், 30 லட்சம் பொதிகள் தட்­டுப்­பாடு ஏற்­படும். இந்­நி­லையில் இந்த தடை எங்­க­ளுக்கு மேலும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும். மேலும் ஏற்­று­ம­திக்­கான செல­வி­னங்­களும் அதி­க­ரித்­து­விடும்.இவ்­வாறு அவர்கள் தெரி­வித்­தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)