இந்­திய பருத்தி: தடை விதித்­தது பாகிஸ்தான்இந்­திய பருத்தி: தடை விதித்­தது பாகிஸ்தான் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.68.64 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.68.64 ...
இந்­திய ஐ.டி., துறைநவீன தொழில்­நுட்­பங்­க­ளுக்கு வேக­மாக மாறினால் பெரிய அளவில் பாதிப்பு இருக்­காது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2016
05:20

ஐத­ராபாத்:‘‘அமெ­ரிக்க அரசு, உள்­நாட்­டி­னரின் வேலை­வாய்ப்பை அதி­க­ரிக்கும் நோக்கில், அயல்­நாட்­ட­வ­ருக்கு வழங்கும் பணி­களை குறைத்­தாலும், அதனால், இந்­திய, ஐ.டி., துறைக்கு பெரிய பாதிப்பு இருக்­காது,’’ என, இன்­போசிஸ் நிறு­வ­னத்தின் முன்னாள் இயக்­கு­னரும், தலைமை நிதி அதி­கா­ரி­யு­மான, டி.வி.மோகன்தாஸ் பாய் தெரி­வித்து உள்ளார்.
அவர், மேலும் கூறி­ய­தா­வது:அமெ­ரிக்க அதிபர் தேர்தல் பிர­சா­ரத்தின் போது, ‘உள்­நாட்டு வேலை­வாய்ப்­பு­களை அதி­க­ரிக்க, ‘எச் 1 பி’ விசா ரத்து உள்­ளிட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும்’ என, டொனால்டு டிரம்ப் தெரி­வித்­தி­ருந்தார். அவர் அதி­ப­ராக பத­வி­யேற்க உள்­ளதால், ‘எச் 1 பி’ விசா ரத்து செய்­யப்­படும் பட்­சத்தில், அமெ­ரிக்­காவில் உள்ள இந்­திய, ஐ.டி., நிறு­வ­னங்கள் அதிகம் பாதிக்­கப்­படும் என, கூறப்­ப­டு­கி­றது.
என்னை பொறுத்­த­வரை, இந்த பாதிப்பு, மிகக் குறை­வா­கவே இருக்கும் என, கரு­து­கிறேன்.அமெ­ரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடு­களில், ஐ.டி., வல்­லு­னர்­க­ளுக்கு பற்­றாக்­குறை உள்­ளது. அதனால், அந்­நா­டு­களில் இருந்து, புது­மை­யான கண்­டு­பி­டிப்­புகள் தொடர்­பான பணிகள், அதி­க­ளவில், வெளி­நா­டு­க­ளுக்குச் செல்லும். இதனால் ஏற்­படும் அதி­கப்­ப­டி­யான செல­வி­னங்­களை குறைக்க, பணி­களில், ‘ரோபோ’ சாப்ட்­வேர்­களை புகுத்­து­வ­தற்­கான தேவை எழும். இதன் கார­ண­மாக, அடுத்த, 3 – 4 ஆண்­டு­களில், வெளி­நா­டு­களில் இருந்து அதிக சாப்ட்வேர் பணி­களை, இந்­திய, ஐ.டி., நிறு­வ­னங்கள் பெறும்.
அதே சமயம், இந்­திய, ஐ.டி., நிறு­வ­னங்கள், எதிர்­கால வளர்ச்­சியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். புதிய தொழில்­நுட்­பங்­களை அடை­யாளம் காணவும், மேம்­பட்ட தொழில்­நுட்­பங்­களில் முத­லீடு மேற்­கொள்­ளவும் நட­வ­டிக்கை எடுத்து, புதிய மாற்­றத்தை நோக்கி பய­ணிக்க வேண்டும். ஐ.டி., துறை, தனக்கு எதி­ரான மாற்­றங்­களை எதிர் கொள்­வதை விட, அடுத்­த­கட்ட மாற்­றத்­திற்கு, தாவ வேண்டும். அத்­துறை நிறு­வ­னங்கள் மதிப்­பிட்­டதை விட, வெளி­நா­டு­களால் ஏற்­படக் கூடிய தாக்கம் அதி­க­மாக இருக்­கவும் வாய்ப்­புள்­ளது. அதை சமா­ளிக்கும் வகையில், இந்­திய, ஐ.டி., துறை, நவீன தொழில்­நுட்­பங்­க­ளுக்கு மிக வேக­மாக மாற வேண்­டி­யது அவ­சியம்.
இதன் மூலம், எத்­த­கைய பாதிப்பில் இருந்தும் தப்­பலாம். ஐ.டி., துறை, மிகப்­பெ­ரிய அள­விற்கு வளர்ந்து விட்­டதால், அதன் வளர்ச்சி விகிதம் குறை­வாக உள்­ளது. எனினும், தற்­போது உள்­ளதை விட, மோச­ம­டைய வாய்ப்­பில்லை. பொரு­ளா­தார கூட்­டு­றவு மற்றும் மேம்­பாட்டு அமைப்பில் உள்ள, 35 நாடு­களின் பொரு­ளா­தார வளர்ச்சி, 2 – 3 சத­வீ­த­மாக உள்­ளது. இத­னுடன் ஒப்­பிடும் போது, இந்­திய, ஐ.டி., துறை, ஆண்­டுக்கு, 7 – 9 சத­வீதம் வளர்ச்சி கண்டு வரு­வது பாராட்­டத்­தக்­கது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)