தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 சரிவு ... இந்தியாவின் தேயிலை ஏற்­று­மதி ரூ.2,084 கோடி­யாக குறைந்துவிட்டது இந்தியாவின் தேயிலை ஏற்­று­மதி ரூ.2,084 கோடி­யாக குறைந்துவிட்டது ...
நவ­ரத்­தி­னங்கள் – ஆப­ர­ணங்கள் துறைக்கு பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2016
01:52

மும்பை;‘செல்­லாத நோட்டு அறி­விப்பால், மக்கள் நவ­ரத்­தி­னங்கள், ஆப­ர­ணங்கள் ஆகி­ய­வற்றை வாங்­கு­வது குறைந்து, அத்­து­றையின் வளர்ச்சி பாதிக்­கப்­படும்’ என, கேர் ரேட்டிங்ஸ் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. அதன் விபரம்:செல்­லாத ரூபாய் நோட்டு அறி­விப்பால், அமைப்பு சார்ந்த துறை, ஏற்­று­மதி சந்தை ஆகி­ய­வற்­றுக்கு அதிக பாதிப்பு இருக்­காது. ஆனால், தங்க நகை­களை விற்­பனை செய்யும் சிறிய வியா­பா­ரி­க­ளுக்கு, நடுத்­தர கால அளவில் பாதிப்பு ஏற்­படும். வைரம் பட்டை தீட்டும் துறை, ஏற்­று­ம­தியை சார்ந்து உள்­ளதால், பாதிப்பு இருக்­காது.
அனைத்தும் டாலர் பரி­வர்த்­தனை என்­பதால், அமைப்பு சார்ந்த நிறு­வ­னங்கள், ஊழி­யர்­க­ளுக்கு ஊதியம் வழங்­கு­வ­திலும் சிக்கல் இருக்­காது. அதே­ச­மயம், வைரங்­களை நறுக்­கு­வது, பட்டை தீட்­டு­வது உள்­ளிட்ட பணி­களை மேற்­கொள்ளும் சிறிய மற்றும் நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­படும். இந்­நி­று­வ­னங்கள், பெரிதும் அமைப்பு சாராத நகை தயா­ரிப்பு நிறு­வ­னங்­களை சார்ந்து உள்­ளன. சிறிய நகை நிறு­வ­னங்­களின் வர்த்­தகம், பெரு­ம­ளவு ரொக்கப் பரி­வர்த்­த­னையில் நடை­பெ­று­வது தான் பாதிப்பு ஏற்­படக் காரணம்.
உள்­நாட்டு நகை வியா­பா­ரத்தில், அமைப்பு சாரா துறை­யி­னரின் பங்­க­ளிப்பு, 70 – 75 சத­வீ­த­மாக உள்­ளது. அதே­ச­மயம், அமைப்பு சார்ந்த துறையும், ஆண்­டுக்கு,15 சத­வீதம் வளர்ச்சி கண்டுவரு­கி­றது. மத்­திய அரசு ஊழி­யர்­க­ளுக்கு, 7வது ஊதியக் குழுவின் பரிந்­து­ரைப்­படி அளிக்­கப்­பட்ட ஊதிய உயர்வு, திரு­மணம், பண்­டிகை உள்­ளிட்ட விழாக் காலம் போன்­ற­வற்றால், மக்­களின் செல­வ­ழிப்பு அதி­க­ரித்து, நவ­ரத்­தி­னங்கள், ஆப­ர­ணங்கள் ஆகி­ய­வற்றின் விற்­பனை உயரும் என, எதிர்­பார்க்­கப்­பட்­டது. அதற்கு, செல்­லாத ரூபாய் நோட்டு திட்டம், முட்­டுக்­கட்டை போட்­டுள்­ளது. இந்த திட்­டத்தின் தாக்கம் குறு­கிய காலத்­திற்கு இருக்கும் என்ற போதிலும், நீண்ட கால அளவில், இதனால் பயன் கிடைக்கும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)