பதிவு செய்த நாள்
02 டிச2016
00:09
ஆமதாபாத்: கடந்த, 16 ஆண்டுகளில், தொழில்முனைவு குறித்த ஆய்வுக் கல்வியில், 177 பேர் தான் பிஎச்.டி., பட்டம் பெற்று உள்ளனர்.
அதே சமயம், இதே காலத்தில், சமூக அறிவியல் துறைகளில் ஆய்வு மேற்கொண்டு, 20,271 பேர், பிஎச்.டி., பட்டம் வாங்கியுள்ளனர். மத்திய அரசு, தொழில் முனைவோரை ஊக்குவிக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்த போதிலும், தொழில்முனைவு குறித்த ஆய்வில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை, மிகக் குறைவாகவே உள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், நாட்டில் உள்ள, 740 பல்கலைகளில், 66 பல்கலைகள் மட்டுமே, தொழில்முனைவுக்கான, பிஎச்.டி., பட்டம் வழங்கி உள்ளன. இந்த ஆய்வில், 104 ஆண்களும், 73 பெண்களும் பங்கேற்று உள்ளனர். பெண் தொழில் முனைவோர் குறித்து தான், அதிகமானோர் ஆய்வு செய்துள்ளனர்.
மஹாராஷ்டிர மாநிலம், 25 பேருக்கு, தொழில்முனைவுக்கான, பிஎச்.டி., பட்டம் வழங்கி, முதல் இடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடங்களில், கர்நாடகா, 18, மத்திய பிரதேசம், 15, ஆந்திரா, 12, தெலுங்கானா, 12 ஆகிய மாநிலங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|