பதிவு செய்த நாள்
02 டிச2016
00:10
மும்பை: டைட்டன் நிறுவனம், குறைந்த விலையில், ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
உள்நாட்டில், டைட்டன் நிறுவனம், ‘சொனாட்டா, பாஸ்ட் டிராக்’ ஆகிய பிராண்டுகளில், வாட்சுகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம், கடந்த ஜன., மாதம், ‘ஜக்ஸ்ட்’ என்ற பெயரில், ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்தது. இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, ‘பாஸ்ட் டிராக், சொனாட்டா’ பிராண்டுகளில், குறைந்த விலை ஸ்மார்ட் வாட்சுகளை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ரவி காந்த் கூறியதாவது:எங்கள் நிறுவனம், ‘ஜக்ஸ்ட்’ ஸ்மார்ட் வாட்ச்சை தொடர்ந்து, ‘ஜக்ஸ்ட் புரோ’ வாட்சுகளை அறிமுகம் செய்தது. இந்த வாட்சுகள் விலை, 19 ஆயிரம் ரூபாய் முதல், 22 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. தற்போது, சொனாட்டா, பாஸ்ட் டிராக் பிராண்டில், அனைவரும் வாங்கக் கூடிய விலையில், ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இவற்றின் விலை, 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் இருக்கும்.
மேலும், நாங்கள் அமெரிக்காவின் புகழ் பெற்ற பிராண்டான, ‘கென்னத் கோல்’ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளோம். அந்நிறுவனத்தின் வாட்சுகளை, இந்தியாவில் விற்பனை செய்ய இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|