தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு ... பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறுகிறது ரயில்வே பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறுகிறது ரயில்வே ...
2025ல் 20 கோடி இளைஞர்கள் வேலையிழக்கும் அபாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2016
14:47

புதுடில்லி : அதிகரித்து வரும் தானியங்கி சேவைகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக 2025 ம் ஆண்டில் நடுத்தர வர்த்தகத்தை சேர்ந்த 20 கோடி இளைஞர்கள் வேலையிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது என தொழில்துறை நிபுணரான டி.வி.மோகன்தாஸ் பாய் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 21 முதல் 41 வயதிற்கு உட்பட்ட 20 கோடி இளைஞர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் சரியான புள்ளி விபர கணக்கு என்னவென்று தெரியவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலானவர்கள் விவசாய சார்ந்த தொழில்களையே செய்து வந்தனர். தொழில்துறைகளும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரித்து வந்தது. தற்போது தானியங்கி சேவைகள், மிஷின்களின் வளர்ச்சி காரணமாகவும், பல இடங்களில் மனிதர்களுக்கு பதிலாக மிஷின்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் ரோபோக்களை வைத்து வேலை செய்யும் முறையை உருவாக்கி வருகின்றன. டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்கள், லாரிகள் ஆகியவற்றை உருவாக்கி வருகின்றன. இந்த முயற்சிகள் படிப்படியாக வளர்ச்சி அடையும் பட்சத்தில் பலரும் வேலை இழக்கும் நிலை ஏற்படும். அதன் பிறகு பல இடங்களில் ரோபர்ட்களே வேலைக்கு அமர்த்தப்படும். ரோபோக்களுக்கு சம்பளம் கொடுக்கும் பிரச்னை, விடுப்பு பிரச்னைகள் இல்லாததால் பெரு நிறுவனங்கள் பலவும் ரோபோவையே விரும்புவார்கள்.
ரோபோக்கள் 24 மணிநேரமும் வேலை செய்யக் கூடியவை. டில்லியில், மெட்ரோ ரயில்கள் தானியங்கியாக செயல்பட்டு வருகின்றன. வங்கிகள் போன்றவற்றில் ஏடிஎம், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படுவதால் இன்னும் பல வங்கி சேவைகளும் தானியங்கி முறைகளில் கொண்டு வரப்பட உள்ளன. அமெரிக்காவில் பல வங்கி கிளைகளில் தற்போதே இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளன. மிக விரைவில் இந்தியாவிலும் ரோபோ முறை நிதி பரிமாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்கமும் தானியங்கி மற்றும் தொழில்நுட்ப முறைகளின் அடிப்படையிலேயே ஏற்படுத்தப்பட்டு வருவதால் பல இடங்களில், பல அடிப்படை நிலை வேலைகளில் பணிபுரிவோர் வேலையிழக்கும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)