பதிவு செய்த நாள்
02 டிச2016
14:47
புதுடில்லி : அதிகரித்து வரும் தானியங்கி சேவைகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக 2025 ம் ஆண்டில் நடுத்தர வர்த்தகத்தை சேர்ந்த 20 கோடி இளைஞர்கள் வேலையிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது என தொழில்துறை நிபுணரான டி.வி.மோகன்தாஸ் பாய் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 21 முதல் 41 வயதிற்கு உட்பட்ட 20 கோடி இளைஞர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் சரியான புள்ளி விபர கணக்கு என்னவென்று தெரியவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலானவர்கள் விவசாய சார்ந்த தொழில்களையே செய்து வந்தனர். தொழில்துறைகளும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரித்து வந்தது. தற்போது தானியங்கி சேவைகள், மிஷின்களின் வளர்ச்சி காரணமாகவும், பல இடங்களில் மனிதர்களுக்கு பதிலாக மிஷின்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் ரோபோக்களை வைத்து வேலை செய்யும் முறையை உருவாக்கி வருகின்றன. டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்கள், லாரிகள் ஆகியவற்றை உருவாக்கி வருகின்றன. இந்த முயற்சிகள் படிப்படியாக வளர்ச்சி அடையும் பட்சத்தில் பலரும் வேலை இழக்கும் நிலை ஏற்படும். அதன் பிறகு பல இடங்களில் ரோபர்ட்களே வேலைக்கு அமர்த்தப்படும். ரோபோக்களுக்கு சம்பளம் கொடுக்கும் பிரச்னை, விடுப்பு பிரச்னைகள் இல்லாததால் பெரு நிறுவனங்கள் பலவும் ரோபோவையே விரும்புவார்கள்.
ரோபோக்கள் 24 மணிநேரமும் வேலை செய்யக் கூடியவை. டில்லியில், மெட்ரோ ரயில்கள் தானியங்கியாக செயல்பட்டு வருகின்றன. வங்கிகள் போன்றவற்றில் ஏடிஎம், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படுவதால் இன்னும் பல வங்கி சேவைகளும் தானியங்கி முறைகளில் கொண்டு வரப்பட உள்ளன. அமெரிக்காவில் பல வங்கி கிளைகளில் தற்போதே இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளன. மிக விரைவில் இந்தியாவிலும் ரோபோ முறை நிதி பரிமாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்கமும் தானியங்கி மற்றும் தொழில்நுட்ப முறைகளின் அடிப்படையிலேயே ஏற்படுத்தப்பட்டு வருவதால் பல இடங்களில், பல அடிப்படை நிலை வேலைகளில் பணிபுரிவோர் வேலையிழக்கும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|