பதிவு செய்த நாள்
02 டிச2016
15:43
புதுடில்லி : பணமில்லாத பரிவர்த்தனைக்கு மக்கள் அனைவரும் மாற வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததை அடுத்து, பணமில்லா பரிவர்த்தனை முறையை நடைமுறைக்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பணமில்லாத பரிவர்த்தனையை அமல்படுத்துவதற்காக 15,000 ஸ்வைப்பிங் மிஷின்களை வழங்குமாறு எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளை இந்திய ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது. டிசம்பர் 31 ம் தேதி முதல் ரயில்வே முன்பதிவு மையங்களில் ஆயிரக்கணக்கான ஸ்வைப்பிங் மிஷின்கள் நிறுவப்பட உள்ளது. தற்போது வரை ரயில்வேயில் ஸ்வைப்பிங் மிஷின் மூலம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை நடைமுறையில் இல்லை.
இது குறித்து ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 12,000 டிக்கெட் கவுன்ட்டர்களில் ஸ்வைப்பிங் மிஷின்கள் நிறுவப்பட உள்ளது. தினசரி பணபரிவர்த்தனை நடைபெறுவதை பொறுத்து ஒரு மையத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மிஷின்கள் நிறுவப்பட உள்ளன. பணத்தை நேரடியாக கையாள்வது எங்கள் பணியாளர்களுக்கு மிகுந்த கடினமாக உள்ளது. இது பலவகைகளிலும் உதவிகரமாக இருக்கும் என்றார்.
முதல்கட்டமாக நகர்புறங்களில் உள்ள ரயில்வே முன்பதிவு மையங்களில் இந்த மிஷின்கள் நிறுவப்பட உள்ளன. அதிக அளவில் மாதாந்திர பாஸ்கள் பெறும் மும்பை போன்ற பெரு நகரங்களில் உடனடியாக இந்த மிஷின்கள் நிறுவப்பட உள்ளன. முதல்கட்டமாக 1000 மிஷின்களை வழங்க எஸ்பிஐ உறுதி அளித்துள்ளது. விற்பனையாளர்கள் மற்றும் கான்ட்ராக்டர்களுக்கு பணமில்லா முறையில் ரயில்வே அமைச்சகம் தொகைகளை வழங்க உள்ளது. ஏற்கனவே 95 சதவீதம் வசூல்களை பணபரிவர்த்தனையை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
முதல்கட்டமாக முன்பதிவு பிரிவுகளில் 55 சதவீதமும், முன்பதிவு அல்லத மற்றும் மாதாந்திர பாஸ் பெறுவோருக்கு பணமில்லா முறையில் பணபரிவர்த்தனை கொண்டு வரப்பட உள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும், இது நடைமுறைப்படுத்தப்பட்டால் பணமில்லா பணவர்த்தனையை துவக்கும் முதல் மத்திய அரசு துறை அமைச்சகம் என்ற பெருமையை ரயில்வே பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|