2025ல் 20 கோடி இளைஞர்கள் வேலையிழக்கும் அபாயம்2025ல் 20 கோடி இளைஞர்கள் வேலையிழக்கும் அபாயம் ... 2017 ல் மீண்டும் வருகிறது நோக்கியா ஸ்மார்ட்போன் 2017 ல் மீண்டும் வருகிறது நோக்கியா ஸ்மார்ட்போன் ...
பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறுகிறது ரயில்வே
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2016
15:43

புதுடில்லி : பணமில்லாத பரிவர்த்தனைக்கு மக்கள் அனைவரும் மாற வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததை அடுத்து, பணமில்லா பரிவர்த்தனை முறையை நடைமுறைக்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பணமில்லாத பரிவர்த்தனையை அமல்படுத்துவதற்காக 15,000 ஸ்வைப்பிங் மிஷின்களை வழங்குமாறு எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளை இந்திய ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது. டிசம்பர் 31 ம் தேதி முதல் ரயில்வே முன்பதிவு மையங்களில் ஆயிரக்கணக்கான ஸ்வைப்பிங் மிஷின்கள் நிறுவப்பட உள்ளது. தற்போது வரை ரயில்வேயில் ஸ்வைப்பிங் மிஷின் மூலம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை நடைமுறையில் இல்லை.
இது குறித்து ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 12,000 டிக்கெட் கவுன்ட்டர்களில் ஸ்வைப்பிங் மிஷின்கள் நிறுவப்பட உள்ளது. தினசரி பணபரிவர்த்தனை நடைபெறுவதை பொறுத்து ஒரு மையத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மிஷின்கள் நிறுவப்பட உள்ளன. பணத்தை நேரடியாக கையாள்வது எங்கள் பணியாளர்களுக்கு மிகுந்த கடினமாக உள்ளது. இது பலவகைகளிலும் உதவிகரமாக இருக்கும் என்றார்.
முதல்கட்டமாக நகர்புறங்களில் உள்ள ரயில்வே முன்பதிவு மையங்களில் இந்த மிஷின்கள் நிறுவப்பட உள்ளன. அதிக அளவில் மாதாந்திர பாஸ்கள் பெறும் மும்பை போன்ற பெரு நகரங்களில் உடனடியாக இந்த மிஷின்கள் நிறுவப்பட உள்ளன. முதல்கட்டமாக 1000 மிஷின்களை வழங்க எஸ்பிஐ உறுதி அளித்துள்ளது. விற்பனையாளர்கள் மற்றும் கான்ட்ராக்டர்களுக்கு பணமில்லா முறையில் ரயில்வே அமைச்சகம் தொகைகளை வழங்க உள்ளது. ஏற்கனவே 95 சதவீதம் வசூல்களை பணபரிவர்த்தனையை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
முதல்கட்டமாக முன்பதிவு பிரிவுகளில் 55 சதவீதமும், முன்பதிவு அல்லத மற்றும் மாதாந்திர பாஸ் பெறுவோருக்கு பணமில்லா முறையில் பணபரிவர்த்தனை கொண்டு வரப்பட உள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும், இது நடைமுறைப்படுத்தப்பட்டால் பணமில்லா பணவர்த்தனையை துவக்கும் முதல் மத்திய அரசு துறை அமைச்சகம் என்ற பெருமையை ரயில்வே பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)