பதிவு செய்த நாள்
03 டிச2016
04:26
புதுடில்லி,:ஆதித்ய பிர்லா நிறுவனம், ஒடிசா மாநிலத்தில், ஆயத்த ஆடை உற்பத்தி ஆலை ஒன்றை அமைக்க உள்ளது. ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த, ஆதித்ய பிர்லா ரீடெய்ல் அண்ட் பேஷன், ஆயத்த ஆடை தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ஒடிசா மாநிலத்தில், புதிய ஆலை ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த ஆலை, ஆண்டுக்கு, 25 லட்சம் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் திறன் உடையது. ஆலையின் கட்டுமான பணிகளுக்கு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், அடிக்கல் நாட்டியுள்ளார்.
இது குறித்து, ஆதித்ய பிர்லா நிறுவனத்தின் உயரதிகாரி ஆஷிஷ் தீக் ஷித் கூறியதாவது:கர்நாடக மாநிலம், பெங்களூரை தாண்டி, முதல் முறையாக, எங்கள் நிறுவனம், ஒடிசாவில் உள்ள புவனேஸ்வரில், ஆயத்த ஆடை உற்பத்தி ஆலை அமைக்கிறது. இங்கு, லுாயிஸ் பிலிப், வேன் ஹூசைன், ஆலன் சோலி, பீட்டர் இங்கிலாந்து ஆகிய பிராண்டுகளின் ஆடைகள் தயாரிக்கப்பட உள்ளன. ஒடிசா ஆலையின் மூலம், 1,600 பேருக்கு வேலை கிடைக்கும். இதில், அதிகளவில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|