பதிவு செய்த நாள்
03 டிச2016
04:27
புதுடில்லி:அதிக எடை ஏற்றும் வாகனங்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளால், கனரக சரக்கு வாகன விற்பனை அதிகரித்து வருகிறது. இந்திய சாலைகளில், 25 டன் எடை உடைய, சரக்கு வாகனங்களில், அதை விட, அதிகளவு சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், வாகன விபத்துகள் நடக்கின்றன. இதையடுத்து, குறைந்த சரக்கு வாகனங்களில், அதிக எடை ஏற்றுவோர் மீது, மத்திய, மாநில அரசுகள், கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால், 37 டன் மற்றும் 49 டன் எடை உடைய, வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.
இது குறித்து, கனரக வாகன தயாரிப்பு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:சுங்கச்சாவடிகளில், அதிக எடை ஏற்றும் வாகனங்களை சோதனை செய்து, அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால், அதிக எடை ஏற்றுவோர், அதற்கேற்ற வாகனங்களை வாங்கி வருகின்றனர். இதையடுத்து, நடப்பு நிதியாண்டின் ஏழு மாதங்களில், ‘டிப்பர்’ வாகன விற்பனை, 32 சதவீதம் உயர்ந்து, 29 ஆயிரத்து, 921 ஆக அதிகரித்துள்ளது. 49 டன் எடை உடைய வாகன விற்பனை, 6 சதவீதம் உயர்ந்து, 21 ஆயிரத்து, 644 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|