பதிவு செய்த நாள்
03 டிச2016
04:29
புவனேஸ்வர்:டால்மியா பாரத், ஒடிசா மாநிலத்தில், 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. டால்மியா பாரத் குழுமம், சிமென்ட் உற்பத்தி, விற்பனை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த குழும நிறுவனங்கள், ஒடிசா அரசு நடத்திய, தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றன. அதில், ஒடிசாவில், விரிவாக்க பணிகளுக்காக, டால்மியா குழுமம், 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது.
இது குறித்து, அந்த குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி, மகேந்திர சிங் கூறியதாவது:எங்கள் குழுமத்தைச் சேர்ந்த, ஒ.சி.எல்., இந்தியா நிறுவனத்திற்கு, ஒடிசாவில், இரு சிமென்ட் ஆலைகள் உள்ளன. அவற்றின் ஆண்டு சிமென்ட் உற்பத்தித்திறன், 54 லட்சம் டன் என்றளவில் உள்ளது. ஒடிசாவின் பொருளாதார வளர்ச்சி, சிறப்பாக அதிகரித்து வருகிறது. வரும், 2020ல், அம்மாநிலத்தின் மொத்த வளர்ச்சி, 12 சதவீதம் இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக, ஒடிசா திகழ்கிறது. எனவே, ஒடிசாவில், எங்கள் ஆலையின் உற்பத்தித்திறனை அதிகரிக்க, 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|