பதிவு செய்த நாள்
04 டிச2016
05:08
புதுடில்லி:மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு, இந்திய வர்த்தகக் கூட்டமைப்பான, ‘அசோசெம்’ அனுப்பியுள்ள கடிதம்: நிறுவனங்கள், வங்கி நடப்பு கணக்கில் இருந்து, ஒரு வாரத்திற்கு, 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது; இந்த வரம்பை உயர்த்த வேண்டும். நிறுவனங்களின் அனைத்து செலவினங்களும், தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, வருமான வரித்துறையால் ஆய்வு செய்யப்படுகிறது. அதனால், பணப் பரிவர்த்தனை வரம்பை, நிறுவனங்கள்தவறாக பயன்படுத்த வாய்ப்பில்லை. மேலும், பணத் தட்டுப்பாடு காரணமாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
அவை, வங்கிகளில் வாங்கிய கடனுக்கு, குறித்த காலத்தில் வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் கடன்களை மறுசீரமைத்து, கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும்; கால தாமதத்திற்கு அபராதம் விதிக்கக் கூடாது. வங்கிகளில், பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது, வங்கிகளிடம் போதிய பணம் உள்ளது என்ற நம்பிக்கையை, மக்களிடம் ஏற்படுத்தும். அதனால், அவர்கள், அச்சத்தில் அதிக ரொக்கத்தை கையிருப்பில் வைப்பது குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|