பதிவு செய்த நாள்
04 டிச2016
05:09
புதுடில்லி:எஸ்.பி.ஐ., லைப், 2017ல், பொது பங்கு வெளியீட்டின் மூலம், நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனத்தின், 74 சதவீத பங்குகள், பாரத ஸ்டேட் வங்கியிடம் உள்ளன. இந்நிலையில், எஸ்.பி.ஐ., லைப், விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளது.இது குறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், அர்ஜித் பாசு கூறியதாவது:நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், எங்கள் நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய், 50 சதவீதம்; புதுப்பிக்கப்பட்ட பிரீமியம் வருவாய், 30 சதவீதம் என, வளர்ச்சி அடைந்துள்ளது. நடப்பு முழு நிதியாண்டில், மொத்த பிரீமிய வருவாய், 40 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணும் என, தெரிகிறது. பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டும் பணி, 2017ல் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|