பதிவு செய்த நாள்
04 டிச2016
05:10
மும்பை:ஐ.எப்.சி., இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விபரம்:மும்பை பங்குச்சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீட்டில், 30 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில், பெரும்பான்மையான நிறுவனங்கள், வரவு – செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்வது; கடனை ஒழுங்காக திரும்பத் தருவது; சப்ளையர்களுக்கு நிலுவையின்றி பணம் வழங்குவது உள்ளிட்ட, கார்ப்பரேட் நிர்வாக விதிமுறைகளை, ஒழுங்காகபின்பற்றி வருகின்றன. விதிமுறைப்படி, நிறுவனர் குடும்பத்தை சாராத, பெண் இயக்குனர்களை, 26 நிறுவனங்கள் நியமித்துஉள்ளன.
மூன்று நிறுவனங்கள், பொதுக்குழு கூட்டத்தை வலைதளத்தில் நேரடி யாக வெளியிட்டு, பங்கு முதலீட்டாளர்கள் பங்கேற்கும் வசதியை செய்து தந்துள்ளன.ஒரு நிறுவனம், தலைமை பொறுப்பு தொடர்பான, எதிர்கால திட்டத்தை வெளியிட்டு உள்ளது. இந்நிறுவனங்கள், வெளிப்படையான நடைமுறைகள் மூலம், இதர நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றன. ஒளிவுமறைவற்ற நிர்வாக நடைமுறைகளை பின்பற்றும் நிறுவனங்கள், சுலபமாக சர்வதேச சந்தையில் நிதி திரட்டிக் கொள்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|