பதிவு செய்த நாள்
04 டிச2016
05:12
இந்துார்:ருச்சி சோயா நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி மூலம், விவசாயிகளுக்கு கடன் வழங்க உள்ளது.ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ், உணவு பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், விவசாயிகளிடம் இருந்து, சோயா பீன், கடுகு உள்ளிட்ட வேளாண் பொருட்களை கொள்முதல் செய்கிறது. எனவே, பொருட்களை சப்ளை செய்யும் விவசாயிகளுக்கு, பாரத ஸ்டேட் வங்கி மூலம், எளிதில் கடன் உதவி வழங்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு, மூலப்பொருட்கள் தொடர்ந்து கிடைக்க வேண்டும். எனவே, பொருட்கள் சப்ளை செய்யும் விவசாயிகளுக்கு, பாரத ஸ்டேட் வங்கி மூலம், கடன் வழங்குவதற்கு உதவி செய்யப்படும். இதன் மூலம், விவசாயிகள், தொடர்ந்து பொருட்களை சப்ளை செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|