சைபர் பணத்தை புரிந்து கொள்ள...  சைபர் பணத்தை புரிந்து கொள்ள... ... காப்­பீடு பிரீ­மியம் செலுத்த அவ­காசம் நீட்­டிப்பு காப்­பீடு பிரீ­மியம் செலுத்த அவ­காசம் நீட்­டிப்பு ...
யு.பி.ஐ., செய­லியை பயன்­ப­டுத்­து­வது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2016
01:20

ஸ்மார்ட்போன் மூலம், வங்கி கணக்கில் இருந்து பண பரி­வர்த்­தனை செய்ய, யுனைடெட் பேமன்ட்ஸ் இன்­டர்பேஸ் எனப்­படும், யு.பி.ஐ., வசதி வழி செய்­கி­றது. நேஷனல் பேமன்ட் கார்ப்­ப­ரே­ஷனால் உரு­வாக்­கப்­பட்ட இந்த வச­தியை, பல்­வேறு முன்­னணி வங்­கிகள் வழங்கி வரு­கின்­றன. அண்­மையில் ஸ்டேட் வங்­கியும் இதற்­கான செய­லியை அறி­முகம் செய்­துள்­ளது.
இந்த வச­தியை பயன்­ப­டுத்த ஆண்ட்­ராய்டு போன், வங்கி கணக்கு மற்றும் வங்கி கணக்­குடன் பதிவு செய்­யப்­பட்ட மொபைல் எண் தேவை. முதலில் யு.பி.ஐ., செய­லியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தர­வி­றக்கம் செய்து கொள்ள வேண்டும். பிளே ஸ்டோர் மற்றும் வங்­கி­களின் அதி­கா­ர­ப்பூர்வ தளங்­களில் இருந்து மட்­டுமே தர­வி­றக்கம் செய்ய வேண்­டி­யது அவ­சியம்.
விர்ச்­சுவல் ஐ.டி.,செய­லியை போனில் நிறு­வி­யதும், உங்கள் பெயர் உள்­ளிட்ட விப­ரங்­களை சமர்ப்­பித்து, ஆறு இலக்க பாஸ்­கோடை உரு­வாக்கி கொள்ள வேண்டும். பதிவு செய்து கொண்ட பின், உங்கள் வங்கி கணக்கு விப­ரத்தை தெரி­விக்க வேண்டும். அதன் பின் உங்­க­ளுக்­கான விர்ச்­சுவல் அடை­யாளத்தை உரு­வாக்கி கொள்ள வேண்டும்.
இ – மெயில் முக­வரி போன்ற இந்த அடை­யாளத்தை கொண்டு பரி­வர்த்­த­னை­களை மேற்­கொள்­ளலாம். இதற்­காக, வங்கி கணக்கு எண்ணின் கடைசி நான்கு இலக்­கங்கள் கொண்ட கட்டம் தோன்றும். அதன் மூலம் உங்­க­ளுக்­கான அடை­யா­ளத்தை உரு­வாக்கி கொள்­ளலாம். இது ஒவ்­வொரு வங்கி செய­லிக்கும் சிறிது மாறு­ப­டலாம். விர்ச்­சுவல் அடை­யா­ளத்தை எப்­படி அமைத்துக் கொள்­வது என்­பது உங்கள் விருப்பம்.
ரக­சிய எண்
அடுத்த கட்­ட­மாக உங்­க­ளுக்­கான மொபைல் பின் எண்ணை உரு­வாக்கி கொள்ள வேண்டும். இதற்­காக டெபிட் கார்டு எண்ணை சமர்ப்­பிக்க வேண்டும். கார்டு விப­ரத்தை அளிக்க விரும்­ப­வில்லை எனில், ஒரு முறை பாஸ்­வேர்டு கோரலாம். இதன் மூலன் பின் எண்ணை உரு­வாக்கி கொள்­ளலாம். இதன் பின் பரி­வர்த்­த­னை­களை மேற்­கொள்­ளலாம். ஆதார் எண்ணை இணைக்கும் வச­தியும் இருக்­கி­றது.
இந்த செயலி மூலம், வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்­பலாம். பணம் பெறலாம். செய­லியில் உள்ள பணம் அனுப்ப, பணம் கோர போன்ற கட்­ட­ளை­களை இதற்­காக பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம். ஒவ்­வொரு பரி­வர்த்­த­னை­யையும் பின் எண்ணை மொபைலி உள்­ளீடு செய்­வதன் மூலமே நிறை­வேற்றிக் கொள்ள முடியும். தொழில்­நுட்ப கோளாறால், பரி­வர்த்­தனை தோல்­வியில் முடிந்தால் பணம் உடனே கணக்கில் திரும்பி சேர்ந்­து­விடும்.
எந்த வங்கி கணக்கை வேண்­டு­மானாலும் இதில் இணைக்க முடியும். உங்கள் கணக்கு இல்­லாத வங்­கியின் யு.பி.ஐ., செய­லியை தர­வி­றக்கம் செய்து, உறுப்­பி­ன­ராகி, அதில் உங்கள் கணக்கை இணைத்துக் கொள்ளும் வசதி இருக்­கி­றது. அதே போல எத்­தனை வங்கி கணக்­கையும் இணைக்­கலாம். நாள் ஒன்­றுக்கு 20 பரி­வர்த்­த­னைகள் மேற்­கொள்­ளலாம். எனினும், ஒரு லட்சம் உச்­ச­வ­ரம்பு உண்டு.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)