பதிவு செய்த நாள்
05 டிச2016
01:22
ஆயுள் காப்பீடு பாலிசிகளுக்கான, பிரீமியம் தொகையை செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் அளிக்கும் பாலிசிகள், நீண்ட கால அடிப்படையில் செயல்படுகின்றன. அவற்றுக்கான பிரீமியம் தொகையை, ஒரே முறையாக செலுத்தலாம் அல்லது காலாண்டு, அரையாண்டு, ஓராண்டு அடிப்படையில், பிரீமியம் செலுத்தும் வசதி உள்ளது. பொதுவாக, பிரீமியம் தவணைத் தொகையை செலுத்த, குறிப்பிட்ட தேதிக்கு பின், ஒரு மாத கால அவகாசம் உண்டு. மாதத் தவணைக்கு இது,
15 நாட்களாகும். இது, கிரேஸ் பீரியட் என, குறிப்பிடப்படுகிறது.தற்போது, ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால், பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் பிரீமியம் தொகையை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, ஆயுள் காப்பீடு பிரீமியம் தொகை செலுத்த, வழக்கமான கிரேஸ் பீரியட் தவிர, மேலும் ஒரு மாத கால அவகாசத்தை, காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ளது. நவ., 8 முதல், டிச., 31 வரை, தவணைக்காலம் வரும் பாலிசிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|