பதிவு செய்த நாள்
08 டிச2016
14:56
சியோல் : சாம்சங் நிறுவனம் தயாரித்து வரும் கேலக்ஸி எஸ் 8 ஸ்மார்ட்போனிலும், ஐபோன் 7இல் மேற்கொள்ளப்பட்டதை போன்றே சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் 8 ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் அகற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஹெட்போன் ஜாக் இல்லாத ஸ்மார்ட்போன்களை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் சாம்சங் இடம்பிடிக்கும் என கூறப்படுகிறது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் தனது கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் ஹோம் பட்டன் அகற்றப்படும் என்றும் செல்ஃபி கேமராவில் ஆட்டோபோகஸ் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டிருக்கும் என்றும் இதன் மூலம் ஹெட்போன் ஜாக் இணைத்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு லீஇகோ, மோட்டோரோலா மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் இன்றி தங்களது ஸ்மார்ட்போன்களை வெளியிட்டன. மற்றொரு அறிக்கையில் எஸ் 8 ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் ஆனது ஹோம் பட்டனில் இருந்து அகற்றப்பட்டு திரையின் கீழ் பொருத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் வழங்கிய 3டி டச் போன்ற தொழில்நுட்பத்தை சாம்சங் நிறுவனத்தின் எஸ் 8 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகின்றது. 3டி டச் தொழில்நுட்பம் முதன் முதலில் ஐபோன் 6 எஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி எஸ் 8 வடிவமைப்பு கிட்டத்தட்ட கேலக்ஸி நோட் 7 போன்றே இருக்கும் என்றும் 2 கே ரெசல்யூஷன் கொண்ட ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ் 8 ஃபிளாக்சிப் ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|