ஐபோன் 7 போன்றே உருவாகும் சாம்சங் எஸ்8ஐபோன் 7 போன்றே உருவாகும் சாம்சங் எஸ்8 ... ஐபோன் 6 வெடிக்க காரணம் : ஆப்பிள் விளக்கம் ஐபோன் 6 வெடிக்க காரணம் : ஆப்பிள் விளக்கம் ...
இன்டர்நெட் இல்லாமல் பேடிஎம் பயன்படுத்தலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2016
15:25

புதுடில்லி : ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட் வசதி இல்லாதவர்களும் பேடிஎம் பயன்படுத்த புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்டர்நெட் இணைப்பு பெறாதவர்களும் பேடிஎம் சேவைகளை பயன்படுத்த அந்நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதற்கென பேடிஎம் புதிய கட்டணமில்லா அழைப்பு எண் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த நம்பரை இன்டர்நெட் இணைப்பு இல்லாதவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். பேடிஎம் அறிவித்திருக்கும் கட்டணமில்லா எண் 180018001234-ஐ டயல் செய்து பேடிஎம் சேவைகளை பயன்படுத்த முடியும். இன்டர்நெட் இணைப்பு கோளாறாக இருப்பது மற்றும் அடிக்கடி இணைப்பு துண்டிக்கப்படும் போது பயனர்கள் இந்த கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு பேடிஎம் சேவைகளை பயன்படுத்த முடியும்.
பேடிஎம் கட்டணமில்லா எண் சேவையை பயனர்கள் மற்றும் விற்பனையாளர்களும் பயன்படுத்த முடியும். புதிய கட்டணமில்லா எண்ணிற்கு அழைப்பு விடுத்து பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். நாடெங்கும் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் நிலையில் டிஜிட்டல் முறையில் பயனர்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்க இத்திட்டம் வழி செய்யும். ஏற்கனவே பேடிஎம் சேவைக்கு பதிவு செய்திருக்கும் பயனர்கள், இந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்து தங்களின் மொபைல் நம்பர் பதிவு செய்து நான்கு இலக்க பாஸ்வேர்டு பதிவு செய்ய வேண்டும். பேடிஎம் சேவைகளை கொண்டு மொபைல் ரீசார்ஜ், கால் டாக்ஸி, பெட்ரோல் பங்குகள், உணவகங்கள், மருந்தகம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயன்படுத்த முடியும்.
'பெரும்பாலான இந்தியர்களை பணமில்லாமல் டிஜிட்டல் முறையில் பரிமாற்றங்களை மேற்கொள்ளச் செய்யும் நோக்கில் பேடிஎம் சேவை துவங்கப்பட்டது. இந்த நோக்கத்தின் அடுத்தக்கட்ட முயற்சியாக கட்டணமில்லா அழைப்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஸ்மார்ட்போன் இல்லாத இந்தியர்களை பணமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வழி செய்யும்'' என பேடிஎம் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் நிதின் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)