பதிவு செய்த நாள்
10 டிச2016
04:58
புதுடில்லி;மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் துறை இணையமைச்சர், அர்ஜுன் ராம் மெக்வால், லோக்சபாவில் கூறியதாவது:வணிக நெறிமுறைகளை மீறிய நிறுவனங்கள் மீது, சந்தைப் போட்டி கட்டுப்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, இந்தாண்டு அக்., வரையிலான, மூன்று ஆண்டுகளில், வணிக நெறிமுறை மீறல் தொடர்பாக, 327 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, 12,918 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
அதில், சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட், சந்தைப் போட்டி குறை தீர்ப்பாயம் ஆகியவற்றின் தடை காரணமாக, 10,454 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் உள்ளது. அபராதத் தொகையில், 2,428 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.எஞ்சிய அபராதத் தொகையில், சந்தை போட்டி ஆணையத்திற்கு, 29.49 கோடி ரூபாய் கிடைத்துள்ளது; நிலுவையில், 6.16 கோடி ரூபாய் உள்ளது. அபராதத்தை வசூலிக்க, சந்தைப் போட்டி ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|