பதிவு செய்த நாள்
10 டிச2016
04:58
புதுடில்லி:மத்திய ஜவுளித் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி, லோக்சபாவில் கூறியதாவது:கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், 4,000 கோடி டாலர் மதிப்பிற்கு, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டிற்கான ஏற்றுமதிக்கு, 4,750 கோடி டாலர் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, சீனா ஆகியவை, இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கு முக்கிய சந்தைகளாக விளங்குகின்றன. ஆனால், அந்நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தநிலையால், ஜவுளிகளுக்கான தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி குறைந்துள்ளது. ஆகவே, நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதிக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவது கடினம் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. ஜவுளித் துறையின் மேம்பாட்டிற்கு, கடந்த ஜூன் மாதம், சிறப்பு ஊக்கச் சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. புதிய சந்தைகளில் கால் பதிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|