பதிவு செய்த நாள்
11 டிச2016
03:18
புதுடில்லி:நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம், அடுத்த ஆறு மாதங்களில், பங்கு வெளியீட்டு பணிகளை துவங்க உள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம், பொது காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின், 100 சதவீத பங்குகள், மத்திய அரசின் வசம் உள்ளன. தற்போது, 28 நாடுகளில், நியூ இந்தியா, அதன் காப்பீட்டு சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், அந்நிறுவனம், பொது பங்கு வெளியீட்டின் மூலமாக, பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், பங்கு வெளியீட்டுக் கான பணிகளை மேற்கொள்ள, மத்திய அமைச்சரவையின் அனுமதிக்கு காத்திருக்கிறது. அனுமதி கிடைத்ததும், பங்கு வெளியீட்டு பணிகள், ஆறு மாதங்களுக்குள் துவங்கும். நடப்பு நிதியாண்டில், இதுவரை, நியூ இந்தியா, பிரீமியம் வருவாயாக, 21 ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்துள்ளது. கடந்த, 2015 – 16ல், சர்வதேச பிரீமியம் வருவாய், 14.46 சதவீதம் உயர்ந்து, 18 ஆயிரத்து, 371 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|