பதிவு செய்த நாள்
11 டிச2016
03:19
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, என்.எல்.சி., இந்தியா, கடந்த செப்., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 440.12 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 525.82 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. இதே காலாண்டுகளில், மொத்த விற்பனை வருவாய், 19.6 சதவீதம் உயர்ந்து, 1,718.19 கோடி ரூபாயில் இருந்து, 2,056.67 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே காலத்தில், அந்நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி, 60.21 லட்சம் டன்னில் இருந்து, 69.27 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி, 496.34 கோடி யூனிட்டில் இருந்து, 525.48 கோடி யூனிட்டாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாதங்களில், அந்நிறுவனத்தின் நிகர லாபம், 26.8 சதவீதம் குறைந்து, 1,083.68 கோடி ரூபாயில் இருந்து, 793 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது. இதே காலத்தில், மொத்த விற்பனை வருவாய், 3,564.09 கோடி ரூபாயில் இருந்து, 3,938.51 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|