பதிவு செய்த நாள்
12 டிச2016
05:38
பொதுவாக, கடன் வாங்காமல் இருப்பதே நல்லது. ஆனால், சில நேரங்களில் கடன் வாங்கும் தேவை உண்டாகலாம். அதற்காக தேவை ஏற்படும் போதெல்லாம் கடன் வாங்குவதும் சரியாக இருக்காது. எப்போது கடன் வாங்கலாம் என்பதை தீர்மானிக்க நல்ல கடனா? மோசமான கடனா எனும் கேள்வியை கேட்டுக் கொள்ள வேண்டும்.
பொதுவாக, வீட்டுக்கடன் போன்றவை நல்ல கடனாக கருதப்படுகிறது. இந்த வகை கடனுக்கு வரிச்சலுகையும் உண்டு. தேய்மானம் கொண்ட வாகனக்கடன் போன்றவை மோசமான கடனாக கருதப்படுகிறது. அதே போல, கடனுக்கான வட்டி விகிதம், அந்த தொகையை முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கக் கூடிய வருமான வட்டி விகிதத்தையும் விட குறைவாக இருந்தால், அது நல்ல கடன் என, கருதலாம். மாறாக, கடனுக்கான வட்டி விகிதம் முதலீடு அளிக்கக் கூடிய பலனைவிட அதிகமாக இருந்தால், அவை மோசமான கடனாக கருதப்படுகிறது.
பணத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை, சிறு வயதில் இருந்தே பிள்ளைகளுக்கு கற்றுத் தருவது, சிறந்தது என, நிதி வல்லுனர்கள் கருதுகின்றனர். அனேகமாக, எண்ணிக்கையை கற்றுக் கொள்ளும் போதே, அவர்கள் பணம் தொடர்பான திறன்களையும் பெற துவங்கி விடுகின்றனர். இதை வளர்த்தெடுக்கும் வகையில், பெற்றோர் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப, பணம் தொடர்பான விஷயங்களை கற்றுத் தரலாம்.
சேமிப்பும், வருமானமும் வயது 3 முதல் 6சேமிப்பின் அருமையை, அதாவது, பணத்தை உடனடியாக செலவு செய்யாமல் இருந்தால், எதிர்கால தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என, புரிய வைக்கலாம். வயது 5 முதல் 8 அலுவலகத்தில் வேலை செய்வது அல்லது ஒரு சேவை அளிப்பதன் மூலம் பணத்தை சம்பாதிக்கிறோம் என்பதை புரிய வைக்கலாம்.
செலவும், விளைவும்
வயது 6 முதல் 10பணத்தை செலவு செய்வதன் மூலம், ஒரு பொருள் அல்லது சேவையை பெறலாம் என்பதை கற்றுத் தரவும். வயது 7 முதல் 11 ஒவ்வொரு செலவுக்கும் ஒரு விலை உண்டு என்பதை புரிய வைக்கவும். அதாவது, ஒரு பொருளை பெற, இன்னொன்றை வாங்காமல் இருக்க வேண்டும்.
தடை வேண்டாம்!• பணம் பற்றி வெளிப்படையாக பேசுங்கள். குழந்தைகள் அருகாமையில் இருக்கும் போது, நிதி விஷயங்களை பேசுங்கள். • ஷாப்பிங் அழைத்துச் சென்று, குறைந்த விலையில், மதிப்புமிக்க பொருட்களை தேடி வாங்குவதன் மூலம் செலவு செய்வதில் கவனம் தேவை என, உணர்த்துங்கள்.
பட்ஜெட்டும், முதலீடும்வயது 11 முதல் 13பணத்தை திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும் என, எடுத்துச் சொல்லி, பட்ஜெட் போட்டு செலவு செய்வதன் அவசியத்தை உணர்த்த வேண்டும்.வயது 13 முதல் 15எதிர்கால தேவைக்காக பணத்தை முதலீடு செய்வதன் அவசியத்தை, மேல்படிப்புக்கான செலவுகள் மூலம் புரிய வைக்கலாம்.
என்ன பயன்?• பணம் தொடர்பான அடிப்படைகளை, சிறு வயதிலேயே கற்றுத் தருவதன் மூலம், துவக்கத்தில் இருந்தே நிதி விஷயங்களில் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்• சிறந்த நிதி பழக்கங்களை கற்றுத் தருவதன் மூலம், அவர்கள் எதிர்காலத்தில், நிதி தொடர்பான சரியான முடிவுகளை மேற்கொள்ளும் நம்பிக்கையை பெறுவர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|